ஆதிகுடி எனும் இத்தலத்தில் மாடு மேய்ப்பாளன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்குப் பிறவியிலேயே ஒரு கை, கால் ஊனமாக இருந்தன. ஒரு நாள் அவன் ஓட்டிச் சென்ற கூட்டத்திலிருந்த பசுக்களில் ஒன்று, ஓரிடத்தில் தானாக பால் சொரிந்து கொண்டிருப் பதைக் கண்டான்.
அங்கே ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை உணர்ந்த அவன், தன் கையில் இருந்த மண் வெட்டியால் தரையை வெட்டினான். அந்தப் பகுதியிலிருந்து செங்குருதி பீறிட்டது. அதைக் கண்டு திகைத்துப் போனான் அவன். பிறகு சுயநினைவுக்கு வந்து, ஊருக்குள் ஓடி மக்களிடம் தான் கண்ட அதிசயத்தைக் கூறினான்.
மக்கள் அவனை மிகவும் அதிசயமாகப் பார்த்தனர். ஆமாம், ஒரு கால், ஒரு கை ஊனமாகவே அவனைப் பார்த்திருந்த ஊரார் இப்போது அவன் ஊனம் நீங்கி ஓடோடி வந்தால் அது அதிசயம்தானே! பிறகு, சம்பவம் நடந்ததாக அவன் கூறிய இடத்திற்குச் சென்றனர். அவன் கூறிய இடத்தில் தோண்டிப் பார்த்தனர்.
அங்கு அழகிய லிங்கம் ஒன்று தென்பட்டது. அதை அங்கேயே பிரதிஷ்டை செய்து, அப்போதைய சோழ மன்னனால் அந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அங்குரம் எனச் சொல்லப்படும் மண்வெட்டியால் தோண்டியபோது வந்த லிங்கம் என்பதால் இறைவனுக்கு ‘அங்குரேஸ்வரர்’ என்ற பெயரே வழங்கலாயிற்று.
இங்குள்ள வாய்க்காலுக்கு கமல காசி தீர்த்தம் என்று பெயர். காசிக்கு இணையான, நீத்தார் கடன் நிறைவேற்ற உகந்த தலம் இது. தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இத்தலத்து இறைவனுக்கு ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. சனீஸ்வரர் ஈஸ்வர பட்டம் பெறுவதற்கு முன்பே இங்கு வந்தார். சனீஸ்வரர் எம தண்டத்தினால் தாக்கப்பட்டு கால் ஊனமானார். அந்த நிலையிலேயே சனிபகவான் மானுட வடிவில் பல சிவாலயங்களுக்குச் சென்று, வழிபட்டு தீர்த்த நீராடல்களை மேற்கொண்டு புனிதமான ஆதிகுடி தலத்திற்கு வந்தார்.
இங்கு பல காலம் தவமிருந்து வரங்களைப் பெற்றார். இந்த ஆலயத்தில் உள்ள விமல லிங்கத் திருமேனியை சனிபகவான் சூட்சும வடிவில் வழிபட்டு ஊனம் நீங்கப் பெற்றார். இப்போதும் சனிபகவான் அப்படி வழிபட்டுக் கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமல லிங்க வழிபாட்டையே சனீஸ்வர வழிபாடாகவும் பக்தர்கள் கருதுகின்றனர். செவ்வாய், சனிக்கிழமைகளில் விமல லிங்கத்திற்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் எட்டு வகையான மூலிகை காப்பு இட்டு பூஜை செய்து, வெண்கலப் பானையில் பால், பொங்கல் படைத்து, முழு வாழை இலையில் தானம் அளித்து, அந்த வெண்கலப் பானையை தானம் தந்தால் அனைத்துவித நோய்களிலிருந்தும் குணம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இங்குள்ள விமல லிங்கத்திற்கு வெண்ணெய் காப்பும், அதன்மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்தும் வழிபட்டால் குணம் நிச்சயம் என்கிறார்கள். ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் பெயர் அங்குரேஸ்வரர். இறைவி, பிரேமாம்பிகை. ஆலய முகப்பைத் தாண்டியதும் பிராகாரமும் நடுவே நந்தியப் பெருமானின் திருமேனியும் உள்ளன. அடுத்துள்ள மகாமண்டபத்தில் நுழைந்தால் எதிரே அன்னையின் சந்நதியும் இடதுபுறம் இறைவனின் சந்நதியும் உள்ளன.
இறைவனின் அர்த்த மண்டப நுழைவாயிலில் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் முருகனின் திருமேனியும் அருள்பாலிக்க, கருவறையில் இறைவன் சுயம்பு மூர்த்தியாய், லிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள் புரிகிறார். அன்னை பிரேமாம்பிகை தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். கோஷ்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் மகாவிஷ்ணுவும், வடக்கில் துர்க்கையும் காட்சியளிக்கிறார்கள். பிராகாரத்தில் தெற்கில் பெரிய வடிவாக விமல லிங்கம் காணப்படுகிறது. ஆலயத்தில நுழைந்தவுடன் முதலில் கண்களைக் கவருவதும் இந்த விமல லிங்கம்தான்.
கிழக்குத் திருச்சுற்றில் மகா கணபதி, சண்முகநாதர்-வள்ளி-தெய்வானை, மகாலட்சுமி, வடக்கில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள். ஆலய தலமரம், வன்னிமரம். இந்த ஆலயத்திற்கு எதிரே மயானம் உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்ரீவாஞ்சியம் மற்றும் ஆதிகுடியான இத்தலம் இரண்டிற்கு எதிரே மட்டும்தான் இப்படி மயானம் அமைந்துள்ளதாக கூறுகின்றனர். முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயம் பல நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாகத் திகழ்கிறது.
மாடு மேய்ப்பவன் மேல் கருணை கொண்டு அவனது பிறவி ஊனத்தை குணமாக்கிய இத்தலத்து இறைவன், தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் மன ஊனத்தையும் சேர்த்து குணமாக்கி அருள்புரிகிறார். திருச்சி மாவட்டம் லால்குடி -அன்பில் பேருந்துப் பாதையில் லால்குடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
Saturday, February 8, 2014
Monday, February 3, 2014
மனதில் உண்டாகும் குழப்பங்களை தீர்த்து வைக்கும் மாயவன்
குருக்ஷேத்திர யுத்தம் மிகவும் உக்கிரமாய் நடந்துகொண்டிருந்தது. பஞ்ச பாண்டவர்களுக்கு நண்பனாய், தத்துவஞானியாய், சிறந்ததொரு வழிகாட்டியாக செயல்பட்டார் பகவான், கிருஷ்ணன்.
எதிரிகளை வெல்வதற்கு நேரடிப் போர் தவிர தந்திர சூழ்ச்சிகளும் அவசியம் என்று அவர்களுக்கு உணர்த்தினார். ‘நியாயங்களைப் புறந்தள்ளிய வர்களை, தர்மத்தை காலடியில் போட்டு மிதித்தவர்களை, கபட நாடகமாடி ஆரம்பகால வெற்றிகளை அநியாயமாகப் பெற்றவர்களை, வஞ்சனையையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்களை அவர்கள் போக்கிலேயே போய் வீழ்த்துவதும் தர்மம் சார்ந்ததுதான் என்பது கிருஷ்ணனின் வாதம்.
அதற்கு பாண்டவர்கள் உடன்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம் -குறிப்பாக தர்மர். பொய் கூட அல்ல; மெய்யைப் பொய்யாகச் சொல்லும்படி கிருஷ்ணன் அறிவுறுத்தியதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதுவும் தங்கள் குரு துரோணாச்சார்யாரைக் கொல்வதற்காக இப்படி ஒரு உத்தியைக் கையாள்வது மிகக் கேவலமானது என்று அவர் கருதினார். ‘‘சூதாடுவது மட்டும் தர்மச் செயலா?’’ கிருஷ்ணன் கேட்டார். ‘‘வீர விளையாட்டுகளில் அர்ஜுனனும், பீமனும் துரியோதனாதியர்களைப் பின்னுக்குத் தள்ளி வெற்றிவாகை சூடினார்களே, அந்த நேர்மை உன் சூதாட்டத்தில் இருந்ததா?
தாயம் எப்படி வேண்டுமானாலும் விழும் என்ற ஊகத்தில், நிச்சயமில்லாத வெற்றியை எதிர்பார்த்து விளையாடும் அந்த சூதாட்டம் நாணயமானதா? பணயம் வைத்துப் பந்தயம் ஆடுவது என்று ஆரம்பித்துவிட்டால், எதிரியின் சொத்துகளை யெல்லாம் தாயத்தாலேயே கைப்பற்றிவிட வேண்டும் என்ற உன் எதிர்பார்ப்பு நியாயமானது தானா? உன்னுடைய உடைமைகள் என்றில்லாமல், தத்தமக்கு என்று தனித்தனி வாழ்வமைத்துக் கொள்ளும் உரிமை பெற்றிருந்த தம்பிகளையும் பணயம் வைக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ‘அண்ணன்’ என்ற உறவுக்கு அவர்கள் காட்டிய அபிரிமிதமான பாசத்துக்கு நீ செலுத்திய நன்றிக்கடனா இது?
உன்னோடு தம்பிகளையும் வைத்து இழந்துவிட்ட நீ, அப்போது உங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதபடி தனித்துவிடப்பட்ட திரௌபதியையும் பணயம் வைக்க மனு தர்மம் இடம் கொடுத்ததா என்ன?’’ தர்மரால் பதில் எதுவும் பேச இயலவில்லை. நாமறியாமலேயே எத்தனையோ அதர்மங்களுக்குத் துணை போயாயிற்று. அதனால் இப்போதும் சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தார். இத்தனைக்கும் கிருஷ்ணன், அவர் பொய் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. உண்மையை, குரலில் ஏற்றத் தாழ்வுடன் வெளிப்படுத்த வேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டார்.
போரில் அசுவத்தாமா என்ற யானையைக் கொல்வது; அதை தர்மர், உரத்த குரலில் ‘அசுவத்தாமா...’ என்று ஆரம்பித்து, மிக மெல்லிய குரலில் ‘என்ற யானை...’ என்று தொடர்ந்து, பிறகு மீண்டும் உரத்தக் குரலில் ‘இறந்துவிட்டான்!’ என்று சொல்வது என்று திட்டம் வகுத்தார் பகவான். இப்போது, இந்த யுத்தக் களத்தில் பொய் சொல்ல விரும்பாத தர்மர் உண்மையைத்தான் சொல்லப்போகிறார்; அதுவும் வார்த்தைகளில் ஒலி ஏற்றத்தாழ்வுடன் சொல்லப் போகிறார், அவ்வளவுதான். இப்போதும் அரை மனதுடன்தான் தர்மர் அந்த தந்திரத்தை செயல்படுத்த தானும் உடந்தையாக இருக்க சம்மதித்தார்.
ஏன் அரை மனது? துரோணாச்சார்யாரின் மகன் பெயரும் அசுவத்தாமன்தான். ‘அசுவத்தாமன்..........இறந்துவிட்டான்,’ என்ற தகவலை அவர் கேட்க நேர்ந்தால், மனம் நொந்தே தன் உயிரை விட்டுவிடுவார் என்பதுதான் கிருஷ்ணனின் எதிர்பார்ப்பு. அவரை மாய்த்துவிட்டால், பிறகு துரியோதனர்களைப் போரில் வழிநடத்தச் சரியான ஆசான் இல்லாமல் போய்விடும் என்பதால், அவர்களை எளிதாக வென்றுவிடலாம்! ‘அசுவத்தாமா இறந்தது; ஆனால், அசுவத் தாமன் இறக்கவில்லை. இந்தக் குழப்பத்தைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் கிருஷ்ணரின் திட்டம் தர்மருக்கு முழுமையாக ஏற்புடையதல்ல.
‘‘உன்னுடைய நல்ல மனத்தால், அந்த பலவீனத்தால், நீயும், உன் தமையன் மார்களும், உன் மனைவியும், உன் தாயும் ஏமாந்தது போதும், இனியாவது அதற்குப் பழிக்குப் பழி வாங்கிக்கொள்,’’ என்று கிருஷ்ணன் மேலும் ஊக்குவித்தார். வேறு வழியில்லை. தர்மர் உடன்பட்டார். எதிர்பார்த்ததுபோலவே, தன் மகன்தான் போரில் கொல்லப்பட்டான், அதுவும் தர்மர் வாயாலேயே கேட்க நேர்ந்தது என்றால் அது நிச்சயம் உண்மைதான் என்று நம்பிய துரோணாச்சார்யார் அப்படியே ஒடுங்கிப்போய் மயங்கிச் சாய்ந்தார். அப்போது பாண்டவர் பக்கத்திலிருந்து திருஷ்டதுய்மன் பாணம் வீச, அவர் உயிர் நீத்தார்.
இந்தச் சம்பவம் தர்மரை வெகுவாக பாதித்தது. அதர்மத்துக்கு அதர்மம்தான் சரியா என்று பலமுறை கிருஷ்ணனைக் கேட்டுக் கேட்டு மாய்ந்துபோனார். யுத்தத்தில் துரியோதனாதியர்கள் மடிய, பாண்டவர்கள் தம் நாட்டை மீட்டுக்கொண்டார்கள். இழந்த சொத்துகள் மீண்டன; ஆனால் இழந்த மனஅமைதி திரும்புமா? ஒரு பொய்யால் தமக்கு வில்வித்தை கற்பித்த ஆசானையே கொன்றுவிட்ட தனக்குப் பிராயசித்தம் உண்டா? தவித்தார் தர்மர். க்ஷேத்திராடனம் புறப்பட்டார். பல தலங்களைத் தரிசித்த அவர், இந்த திருச்செங்குன்றூர் தலத்துக்கு வந்தபோது, மனம், மிகவும் அமைதியாவதை உணர்ந்தார்.
தன் தோஷத்துக்குப் பிராயசித் தம் இங்கே தனக்கு அனுக்ரகிக்கப்படுவது அவருக்குப் புரிந்தது. பகவான் கிருஷ்ணனே, இங்கே இமையவர் அப்பனாகக் காட்சி அளிக்க, அப்படியே நெகிழ்ந்து போனார் தர்மர். அதோடு உடனே, அங்கேயே, அர்ச்சாவதாரமாகக் காட்சியளித்தப் பெருமாளுக்கு ஒரு கோயில் உருவாக்கினார். அந்தக் கோயில்தான் இப்போது நாம் தரிசிக்கும் திருச்செங்குன்றூர் திவ்யதேசம். இதனை ‘தர்மர் அம்பலம்’ என்றழைக்கிறார்கள். இந்தத் தலத்தில்தான், இந்தப் பெருமாள்தான், முருகப் பெருமானுக்கும் சூரபத்மனைக் கொல்லும் ஆற்றலை அளித்திருக்கிறார் என்கிறது இன்னொரு புராணத் தகவல்.
அது என்ன? சூரபத்மன், சிவபெருமானால் பல வரங்கள் அருளப் பெற்றவன். அந்த ஆணவத்தில் அவன் தேவர்களைப் பெரிதும் இம்சிக்கத் தொடங்கினான். அவனால் ஏற்பட்ட வேதனைகளைத் தாங்க இயலாத தேவர்கள், சிவபெருமானிடம் அழுது முறையிட்டார்கள். அவர்தானே வரம் கொடுத்தார், அதனால் அவருடைய சொல்லுக்கு அசுரன் கட்டுப்படுவான் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரோ, அவனுடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்ததால் தான் அவனுடைய தகுதிக்கும் மீறிய வரங்களைக் கொடுத்துவிட்டதாகவும், அதனால் அவனால் தன்னைக் கட்டுப்படுத்த இயலாது என்றும், திருச்செங்குன்றூரில் கோயில் கொண்டிருக்கும் இமயவர் அப்பனைச் சரணடைந்து தொழுதால், அவர் நல்வழிக் காட்டுவார் என்றும் அவர்களை ஆற்றுப்படுத்தினார்.
உடனே தேவர்கள் இமயவர் அப்பனை அடைந்து நற்கதி வேண்டினார்கள். அவர்களுடைய குறைகளைக் கேட்ட பெருமாள், சிவபெருமான், சூரபத்மனுக்குக் கொடுத்திருக்கும் வரங்களையும் அறிந்துகொண்டார். அந்த வரங்களையும் மீறிய ஒரு சக்தியால்தான் அவனுடைய வதம் நிகழ வேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொண்டார். பிறகு முருகப் பெருமானை அழைத்து அந்தப் பொறுப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். முருகனும் தன்னிடமிருந்த வேற்படையால் சூரபத்மனையும் அவனுடைய அரக்கர் படைகளையும் வதைத்து ஒழித்தான்.
பல்வேறு வடிவங்களில் தோன்றி போரிட்ட சூரபத்மனை முருகன் ஒவ்வொன்றாக வெற்றிகண்ட நேர்த்தி கண்டு தேவர்களுடன் பெருமாளும் வியந்து மகிழ்ந்தார். இறுதியாக, ஒரு மாமரமாகத் தோன்றிய அரக்கனை இரண்டாகப் பிளந்து ஒன்றை சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் மாற்றி, அவ்விரண்டையுமே தன் கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக்கொண்டான். இந்தப் பெருந்தன்மையையும் பாராட்டினார் பெருமாள். கேரளத்துப் பாரம்பரியத்தை விளக்கும் வட்டவடிவமான கருவறையினுள் இமையவர் அப்பன் கொலுவிருக்கிறார். தர்மரின் மன ஆறுதலுக்குக் காரணமான பெருமாள் இவர் என்றெண்ணும்போது, எத்தகைய மனக் குழப்பத்தையும் தீர்த்துவைக்கும் பிரகாசமும் மனதில் ஒளிர்கிறது.
மிகப் பெரிய வெளிப் பிராகாரம். பசுமை கொழிக்கும் இயற்கைச் சூழலுடன், மிக சுத்தமாக விளங்குகிறது கோயில் வளாகம். ஐயப்பன் தனிச் சந்நதி கொண்டு விளங்குகிறார். அவருக்குச் சற்று அருகில் ஆவுடையுடன் கூடிய லிங்கம் அருள்பாலிக்கிறது. கோசாலை கிருஷ்ணனுக்கும் ஒரு சந்நதி. ஒரு பெரிய அரசமரத்துக்கு அடியில் மேடை கட்டியிருக்கிறார்கள். அந்த மரத்துக்கு பக்தர்கள் பூஜை செய்கிறார்கள். பக்கத்தில் திருச்சிற்றாறு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தலத்தின் இந்த தீர்த்தமானது சங்க தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம் இது. அவர் பாடிப் பரவசப்பட்ட பத்துப் பாசுரங்களில் ஒன்றை இங்கே சுவைப்போம்:
வார்கடா அருவி யானை மாமலையின்
மருப்பு இணைக்குவடு இறுத்து உருட்டி
ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து
அரங்கின்
மல்லரைக் கொன்று சூழ்பரண்மேல்
போர்கடா அரசர் புறக்கிட மாட
மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறி எங்கள் செல்சார்வே
-‘குவலயாபீடம் என்ற மலைபோன்ற யானையின் அருவிபோலப் பொங்கிப் பெருகும் மதநீரையும் கண்டு மருளாது அதன் இரு தந்தங்களையும் பிடித்திழுத்து, முறித்து அந்த பேருரு யானையை வதம் செய்தவன், எம்பெருமான். அதுமட்டுமா, அரங்கில் நெடிதுயர்ந்த மல்லர்களையும் வீழ்த்தியவன். பரண் அமைத்துப் போரிட்ட அரசர்களையும் வெருண்டோட வைத்தவன். மண்டபத்தின் மேல் மாடத்தில் அமர்ந்திருந்த கம்சனை அழித்தவன். இத்தனையையும் ஓர் இடைச் சிறுவனாக, பால்ய பருவத்திலேயே நிகழ்த்தி அனைவரையும் திகைக்க வைத்தவன். அந்தப் பெருமான் உறையும், திருச்சிற்றாற்றங்கரை மீதமைந்த திருச்செங்குன்றூர் எனும் திவ்ய தேசமே நாமெல்லாம் சென்றடைய வேண்டிய இடம்,’ என்கிறார்.
தியான ஸ்லோகம்
திருச்செங்குன்றூர் சென்று இமையவர் அப்பனை தரிசிக்கும்வரை அவரது தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:
ஸ்ரீ விஷ்ணுர் தேவதா தஸ்த் வருணஸரஸிஜா ரக்த நேத்ரஸ்தலேச:
பச்சாத் ஸ்ரீ சங்க தீர்தாச்ரய புவிசஜ கஜ்ஜியோதிரங்கே விமாநே
யோபாதி ஸ்வர்ண வல்ல்யாஸ ஹரிரநுதிநம் பாதுசித்தேமதியே
பச்சாத் வக்த்ரச்ச பஸ்மாஸுர தநுமதநா சக்த சம்போ: ப்ரஸந்ந:
(ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம்)
பொதுப் பொருள்: ‘ரக்த நேத்ரஸ்தலம்’ (செங்குருதிபோல சிவந்து திகழும் திருச்செங்கண்ணூர்) என்று கூறப்பெறும் திருச்செங்குன்றூர் என்னும் இத்திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் இமையவர் அப்பனே நமஸ்காரம். ஸ்வர்ணவல்லித் தாயாருடன், ஜகஜ்யோதி விமான நிழலில், சங்க தீர்த்தக் கரையில், மேற்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில், முருகப் பெருமான் மூலமாக பஸ்மாசுரனை அழித்து, அவருக்கு நேரிலும் காட்சி கொடுத்து அருளிய எம்பெருமானே, நமஸ்காரம். இதே நிலையில் என்றைக்கும் என் உள்ளத்தில் தாங்கள் விளங்குவீர்களாக. திருவனந்தபுரம்-கொல்லம்-எர்ணாகுளம் பாதையில் செங்கணூர் ரயில் நிலையத்தில் இறங்கி, இக்கோயிலை அடையலாம்.
எதிரிகளை வெல்வதற்கு நேரடிப் போர் தவிர தந்திர சூழ்ச்சிகளும் அவசியம் என்று அவர்களுக்கு உணர்த்தினார். ‘நியாயங்களைப் புறந்தள்ளிய வர்களை, தர்மத்தை காலடியில் போட்டு மிதித்தவர்களை, கபட நாடகமாடி ஆரம்பகால வெற்றிகளை அநியாயமாகப் பெற்றவர்களை, வஞ்சனையையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்களை அவர்கள் போக்கிலேயே போய் வீழ்த்துவதும் தர்மம் சார்ந்ததுதான் என்பது கிருஷ்ணனின் வாதம்.
அதற்கு பாண்டவர்கள் உடன்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம் -குறிப்பாக தர்மர். பொய் கூட அல்ல; மெய்யைப் பொய்யாகச் சொல்லும்படி கிருஷ்ணன் அறிவுறுத்தியதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதுவும் தங்கள் குரு துரோணாச்சார்யாரைக் கொல்வதற்காக இப்படி ஒரு உத்தியைக் கையாள்வது மிகக் கேவலமானது என்று அவர் கருதினார். ‘‘சூதாடுவது மட்டும் தர்மச் செயலா?’’ கிருஷ்ணன் கேட்டார். ‘‘வீர விளையாட்டுகளில் அர்ஜுனனும், பீமனும் துரியோதனாதியர்களைப் பின்னுக்குத் தள்ளி வெற்றிவாகை சூடினார்களே, அந்த நேர்மை உன் சூதாட்டத்தில் இருந்ததா?
தாயம் எப்படி வேண்டுமானாலும் விழும் என்ற ஊகத்தில், நிச்சயமில்லாத வெற்றியை எதிர்பார்த்து விளையாடும் அந்த சூதாட்டம் நாணயமானதா? பணயம் வைத்துப் பந்தயம் ஆடுவது என்று ஆரம்பித்துவிட்டால், எதிரியின் சொத்துகளை யெல்லாம் தாயத்தாலேயே கைப்பற்றிவிட வேண்டும் என்ற உன் எதிர்பார்ப்பு நியாயமானது தானா? உன்னுடைய உடைமைகள் என்றில்லாமல், தத்தமக்கு என்று தனித்தனி வாழ்வமைத்துக் கொள்ளும் உரிமை பெற்றிருந்த தம்பிகளையும் பணயம் வைக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ‘அண்ணன்’ என்ற உறவுக்கு அவர்கள் காட்டிய அபிரிமிதமான பாசத்துக்கு நீ செலுத்திய நன்றிக்கடனா இது?
உன்னோடு தம்பிகளையும் வைத்து இழந்துவிட்ட நீ, அப்போது உங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதபடி தனித்துவிடப்பட்ட திரௌபதியையும் பணயம் வைக்க மனு தர்மம் இடம் கொடுத்ததா என்ன?’’ தர்மரால் பதில் எதுவும் பேச இயலவில்லை. நாமறியாமலேயே எத்தனையோ அதர்மங்களுக்குத் துணை போயாயிற்று. அதனால் இப்போதும் சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தார். இத்தனைக்கும் கிருஷ்ணன், அவர் பொய் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. உண்மையை, குரலில் ஏற்றத் தாழ்வுடன் வெளிப்படுத்த வேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டார்.
போரில் அசுவத்தாமா என்ற யானையைக் கொல்வது; அதை தர்மர், உரத்த குரலில் ‘அசுவத்தாமா...’ என்று ஆரம்பித்து, மிக மெல்லிய குரலில் ‘என்ற யானை...’ என்று தொடர்ந்து, பிறகு மீண்டும் உரத்தக் குரலில் ‘இறந்துவிட்டான்!’ என்று சொல்வது என்று திட்டம் வகுத்தார் பகவான். இப்போது, இந்த யுத்தக் களத்தில் பொய் சொல்ல விரும்பாத தர்மர் உண்மையைத்தான் சொல்லப்போகிறார்; அதுவும் வார்த்தைகளில் ஒலி ஏற்றத்தாழ்வுடன் சொல்லப் போகிறார், அவ்வளவுதான். இப்போதும் அரை மனதுடன்தான் தர்மர் அந்த தந்திரத்தை செயல்படுத்த தானும் உடந்தையாக இருக்க சம்மதித்தார்.
ஏன் அரை மனது? துரோணாச்சார்யாரின் மகன் பெயரும் அசுவத்தாமன்தான். ‘அசுவத்தாமன்..........இறந்துவிட்டான்,’ என்ற தகவலை அவர் கேட்க நேர்ந்தால், மனம் நொந்தே தன் உயிரை விட்டுவிடுவார் என்பதுதான் கிருஷ்ணனின் எதிர்பார்ப்பு. அவரை மாய்த்துவிட்டால், பிறகு துரியோதனர்களைப் போரில் வழிநடத்தச் சரியான ஆசான் இல்லாமல் போய்விடும் என்பதால், அவர்களை எளிதாக வென்றுவிடலாம்! ‘அசுவத்தாமா இறந்தது; ஆனால், அசுவத் தாமன் இறக்கவில்லை. இந்தக் குழப்பத்தைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் கிருஷ்ணரின் திட்டம் தர்மருக்கு முழுமையாக ஏற்புடையதல்ல.
‘‘உன்னுடைய நல்ல மனத்தால், அந்த பலவீனத்தால், நீயும், உன் தமையன் மார்களும், உன் மனைவியும், உன் தாயும் ஏமாந்தது போதும், இனியாவது அதற்குப் பழிக்குப் பழி வாங்கிக்கொள்,’’ என்று கிருஷ்ணன் மேலும் ஊக்குவித்தார். வேறு வழியில்லை. தர்மர் உடன்பட்டார். எதிர்பார்த்ததுபோலவே, தன் மகன்தான் போரில் கொல்லப்பட்டான், அதுவும் தர்மர் வாயாலேயே கேட்க நேர்ந்தது என்றால் அது நிச்சயம் உண்மைதான் என்று நம்பிய துரோணாச்சார்யார் அப்படியே ஒடுங்கிப்போய் மயங்கிச் சாய்ந்தார். அப்போது பாண்டவர் பக்கத்திலிருந்து திருஷ்டதுய்மன் பாணம் வீச, அவர் உயிர் நீத்தார்.
இந்தச் சம்பவம் தர்மரை வெகுவாக பாதித்தது. அதர்மத்துக்கு அதர்மம்தான் சரியா என்று பலமுறை கிருஷ்ணனைக் கேட்டுக் கேட்டு மாய்ந்துபோனார். யுத்தத்தில் துரியோதனாதியர்கள் மடிய, பாண்டவர்கள் தம் நாட்டை மீட்டுக்கொண்டார்கள். இழந்த சொத்துகள் மீண்டன; ஆனால் இழந்த மனஅமைதி திரும்புமா? ஒரு பொய்யால் தமக்கு வில்வித்தை கற்பித்த ஆசானையே கொன்றுவிட்ட தனக்குப் பிராயசித்தம் உண்டா? தவித்தார் தர்மர். க்ஷேத்திராடனம் புறப்பட்டார். பல தலங்களைத் தரிசித்த அவர், இந்த திருச்செங்குன்றூர் தலத்துக்கு வந்தபோது, மனம், மிகவும் அமைதியாவதை உணர்ந்தார்.
தன் தோஷத்துக்குப் பிராயசித் தம் இங்கே தனக்கு அனுக்ரகிக்கப்படுவது அவருக்குப் புரிந்தது. பகவான் கிருஷ்ணனே, இங்கே இமையவர் அப்பனாகக் காட்சி அளிக்க, அப்படியே நெகிழ்ந்து போனார் தர்மர். அதோடு உடனே, அங்கேயே, அர்ச்சாவதாரமாகக் காட்சியளித்தப் பெருமாளுக்கு ஒரு கோயில் உருவாக்கினார். அந்தக் கோயில்தான் இப்போது நாம் தரிசிக்கும் திருச்செங்குன்றூர் திவ்யதேசம். இதனை ‘தர்மர் அம்பலம்’ என்றழைக்கிறார்கள். இந்தத் தலத்தில்தான், இந்தப் பெருமாள்தான், முருகப் பெருமானுக்கும் சூரபத்மனைக் கொல்லும் ஆற்றலை அளித்திருக்கிறார் என்கிறது இன்னொரு புராணத் தகவல்.
அது என்ன? சூரபத்மன், சிவபெருமானால் பல வரங்கள் அருளப் பெற்றவன். அந்த ஆணவத்தில் அவன் தேவர்களைப் பெரிதும் இம்சிக்கத் தொடங்கினான். அவனால் ஏற்பட்ட வேதனைகளைத் தாங்க இயலாத தேவர்கள், சிவபெருமானிடம் அழுது முறையிட்டார்கள். அவர்தானே வரம் கொடுத்தார், அதனால் அவருடைய சொல்லுக்கு அசுரன் கட்டுப்படுவான் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரோ, அவனுடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்ததால் தான் அவனுடைய தகுதிக்கும் மீறிய வரங்களைக் கொடுத்துவிட்டதாகவும், அதனால் அவனால் தன்னைக் கட்டுப்படுத்த இயலாது என்றும், திருச்செங்குன்றூரில் கோயில் கொண்டிருக்கும் இமயவர் அப்பனைச் சரணடைந்து தொழுதால், அவர் நல்வழிக் காட்டுவார் என்றும் அவர்களை ஆற்றுப்படுத்தினார்.
உடனே தேவர்கள் இமயவர் அப்பனை அடைந்து நற்கதி வேண்டினார்கள். அவர்களுடைய குறைகளைக் கேட்ட பெருமாள், சிவபெருமான், சூரபத்மனுக்குக் கொடுத்திருக்கும் வரங்களையும் அறிந்துகொண்டார். அந்த வரங்களையும் மீறிய ஒரு சக்தியால்தான் அவனுடைய வதம் நிகழ வேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொண்டார். பிறகு முருகப் பெருமானை அழைத்து அந்தப் பொறுப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். முருகனும் தன்னிடமிருந்த வேற்படையால் சூரபத்மனையும் அவனுடைய அரக்கர் படைகளையும் வதைத்து ஒழித்தான்.
பல்வேறு வடிவங்களில் தோன்றி போரிட்ட சூரபத்மனை முருகன் ஒவ்வொன்றாக வெற்றிகண்ட நேர்த்தி கண்டு தேவர்களுடன் பெருமாளும் வியந்து மகிழ்ந்தார். இறுதியாக, ஒரு மாமரமாகத் தோன்றிய அரக்கனை இரண்டாகப் பிளந்து ஒன்றை சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் மாற்றி, அவ்விரண்டையுமே தன் கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக்கொண்டான். இந்தப் பெருந்தன்மையையும் பாராட்டினார் பெருமாள். கேரளத்துப் பாரம்பரியத்தை விளக்கும் வட்டவடிவமான கருவறையினுள் இமையவர் அப்பன் கொலுவிருக்கிறார். தர்மரின் மன ஆறுதலுக்குக் காரணமான பெருமாள் இவர் என்றெண்ணும்போது, எத்தகைய மனக் குழப்பத்தையும் தீர்த்துவைக்கும் பிரகாசமும் மனதில் ஒளிர்கிறது.
மிகப் பெரிய வெளிப் பிராகாரம். பசுமை கொழிக்கும் இயற்கைச் சூழலுடன், மிக சுத்தமாக விளங்குகிறது கோயில் வளாகம். ஐயப்பன் தனிச் சந்நதி கொண்டு விளங்குகிறார். அவருக்குச் சற்று அருகில் ஆவுடையுடன் கூடிய லிங்கம் அருள்பாலிக்கிறது. கோசாலை கிருஷ்ணனுக்கும் ஒரு சந்நதி. ஒரு பெரிய அரசமரத்துக்கு அடியில் மேடை கட்டியிருக்கிறார்கள். அந்த மரத்துக்கு பக்தர்கள் பூஜை செய்கிறார்கள். பக்கத்தில் திருச்சிற்றாறு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தலத்தின் இந்த தீர்த்தமானது சங்க தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம் இது. அவர் பாடிப் பரவசப்பட்ட பத்துப் பாசுரங்களில் ஒன்றை இங்கே சுவைப்போம்:
வார்கடா அருவி யானை மாமலையின்
மருப்பு இணைக்குவடு இறுத்து உருட்டி
ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து
அரங்கின்
மல்லரைக் கொன்று சூழ்பரண்மேல்
போர்கடா அரசர் புறக்கிட மாட
மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறி எங்கள் செல்சார்வே
-‘குவலயாபீடம் என்ற மலைபோன்ற யானையின் அருவிபோலப் பொங்கிப் பெருகும் மதநீரையும் கண்டு மருளாது அதன் இரு தந்தங்களையும் பிடித்திழுத்து, முறித்து அந்த பேருரு யானையை வதம் செய்தவன், எம்பெருமான். அதுமட்டுமா, அரங்கில் நெடிதுயர்ந்த மல்லர்களையும் வீழ்த்தியவன். பரண் அமைத்துப் போரிட்ட அரசர்களையும் வெருண்டோட வைத்தவன். மண்டபத்தின் மேல் மாடத்தில் அமர்ந்திருந்த கம்சனை அழித்தவன். இத்தனையையும் ஓர் இடைச் சிறுவனாக, பால்ய பருவத்திலேயே நிகழ்த்தி அனைவரையும் திகைக்க வைத்தவன். அந்தப் பெருமான் உறையும், திருச்சிற்றாற்றங்கரை மீதமைந்த திருச்செங்குன்றூர் எனும் திவ்ய தேசமே நாமெல்லாம் சென்றடைய வேண்டிய இடம்,’ என்கிறார்.
தியான ஸ்லோகம்
திருச்செங்குன்றூர் சென்று இமையவர் அப்பனை தரிசிக்கும்வரை அவரது தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:
ஸ்ரீ விஷ்ணுர் தேவதா தஸ்த் வருணஸரஸிஜா ரக்த நேத்ரஸ்தலேச:
பச்சாத் ஸ்ரீ சங்க தீர்தாச்ரய புவிசஜ கஜ்ஜியோதிரங்கே விமாநே
யோபாதி ஸ்வர்ண வல்ல்யாஸ ஹரிரநுதிநம் பாதுசித்தேமதியே
பச்சாத் வக்த்ரச்ச பஸ்மாஸுர தநுமதநா சக்த சம்போ: ப்ரஸந்ந:
(ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம்)
பொதுப் பொருள்: ‘ரக்த நேத்ரஸ்தலம்’ (செங்குருதிபோல சிவந்து திகழும் திருச்செங்கண்ணூர்) என்று கூறப்பெறும் திருச்செங்குன்றூர் என்னும் இத்திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் இமையவர் அப்பனே நமஸ்காரம். ஸ்வர்ணவல்லித் தாயாருடன், ஜகஜ்யோதி விமான நிழலில், சங்க தீர்த்தக் கரையில், மேற்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில், முருகப் பெருமான் மூலமாக பஸ்மாசுரனை அழித்து, அவருக்கு நேரிலும் காட்சி கொடுத்து அருளிய எம்பெருமானே, நமஸ்காரம். இதே நிலையில் என்றைக்கும் என் உள்ளத்தில் தாங்கள் விளங்குவீர்களாக. திருவனந்தபுரம்-கொல்லம்-எர்ணாகுளம் பாதையில் செங்கணூர் ரயில் நிலையத்தில் இறங்கி, இக்கோயிலை அடையலாம்.
Saturday, January 25, 2014
வழமைக்கு மாறாக அமைந்திருக்கும் சிவலிங்கம்
திருக்கோவில்களில் சாதாரணமாக சிவலிங்கம் கிழக்கு நோக்கியே காட்சி தரும்.
ஆனால், மயிலாபூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கம் வழக்கத்திற்கு மாறாக மேற்கு பார்த்தபடி காட்சி தருகிறது.
ஆனால், மயிலாபூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கம் வழக்கத்திற்கு மாறாக மேற்கு பார்த்தபடி காட்சி தருகிறது.
Monday, January 13, 2014
பொங்குவதற்கு உகந்த நேரம்
பொங்கல் பண்டிகை. உத்தராயணப் புண்ய கால தொடக்கம்.
பொங்கலிட உகந்த நேரம் காலை மணி 7.50 முதல் 8.50க்குள் அல்லது 10.30 முதல் 11.00 மணி வரை.
பொங்கலிட உகந்த நேரம் காலை மணி 7.50 முதல் 8.50க்குள் அல்லது 10.30 முதல் 11.00 மணி வரை.
பொங்கல் தினத்தில் கடைப்பிடிக்கப்படும் சடங்குகள்
பொங்கல் என்பது தென் இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு புகழ் பெற்ற அறுவடை திருவிழாவாகும். வளர்ந்து வளரும் நவீன உலகத்தில் கலாச்சாரமும் சடங்குகளும் மாறி கொண்டிருந்தாலும் கூட இந்த திருவிழா மீது இருக்கும் ஆர்வம் அப்படியே தான் உள்ளது.
இது அறுவடை திருவிழா என்பதால், புது பயிர்களை அறுவடை செய்து, சமைத்து கடவுளுக்கு முதலில் படைக்கப்படும். இத்திருவிழா தொடர்ந்து நாலு நாட்களுக்கு கொண்டாடப்படும். பொங்கல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் ஒரு தனித்துவமான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை கொண்டுள்ளது. பண்டிகையின் முதல் நாள் போகி பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. அதிகமாக அறுவடை செய்ய, இந்நாளில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இந்திர பகவானை வணங்குவார்கள்.
பண்டிகையின் இரண்டாவது நாளை சூர்ய பொங்கல் என்று அழைப்பார்கள். அறுவடை சிறப்பாக நடந்திட உதவிடும் சூரியனை இந்நாளில் வணங்குவார்கள். பண்டிகையின் மூன்றாவது நாளை மாட்டுப் பொங்கல் என்று அழைப்பார்கள். இந்நாளில், மாடு மேய்ப்பவர்கள், தங்களின் மாடுகள் மற்றும் காளைகளுக்கு நன்றியை செலுத்துவார்கள். பண்டிகையின் நான்காம் நாளை காணும் பொங்கல் என்று அழைப்பார்கள்.
கடைசி நாளில் தான் சொந்த பந்தங்களை பார்க்க அவர்கள் வீட்டிற்கு செல்வார்கள். இந்தியாவில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதமான சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இத்திருவிழக்களின் வலிமையை காத்திட பழங்காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் இன்றளவும் கூட கடைப்பிடிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அதனால் பொங்கல் பண்டிகையில் பின்பற்றப்படும் சடங்குகளை இப்போது பார்க்கலாமா?
சூர்ய பூஜை
பொங்கல் பண்டிகையில் வழிபடப்படும் முக்கிய கடவுள் சூரிய பகவான். அதனால் சூரிய பகவானை வழிப்படுவதை சுற்றி தான் அனைத்து சடங்குகளும் நடைபெறும். பொங்கலன்று வீட்டிற்கு வெளியே இப்பூஜை நடைபெறும்.
பொங்கல் கோலம் போடுவது
பூஜைக்காக தேர்ந்தெடுக்கப்படும் இடத்தை நன்றாக சுத்தம் செய்த பின்னர், அங்கே சூரிய கோலம் போடப்படும். வெள்ளை கோல மாவை கொண்டு ரங்கோலி வகை போல் போடப்படுவது தான் கோலம் என்பதை நாம் அனைவருமே அறிவோம். சூரிய பகவானின் முகமும் கோலத்துடன் சேர்ந்து வரையப்படும். மயில், கரும்பு, பொங்கும் பொங்கல் மற்றும் வளமையை குறிக்கும் படங்களையும் கோலமாக போடுவார்கள்.
உணவு
பொங்கல் பூஜையில் உணவுகளும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்நநாளில், வீட்டிற்கு வெளியே சர்க்கரைப் பொங்கல் விசேஷமாக செய்யப்படும். மூன்று கரும்புகள் ஒன்றாக கட்டப்பட்டு செங்குத்தாக நிறுத்தப்படும். மஞ்சள் செடி கட்டப்பட்ட பானையில் சர்க்கரைப் பொங்கல் சமைக்கப்படும்.
வழிபாடு (இறை வணக்கம்)
பொதுவாக பொங்கல் கொண்டாடும் போது சூர்ய அஷ்டோடரம் அல்லது காயத்ரி மந்திரம் ஓதப்படும்.
பூஜைகளுக்கு பின்
போச்சி முடிந்தபின், புனித நீரும், பூக்களும் கோலத்தின் மீதும் சர்க்கரைப் பொங்கலின் மீதும் தெளிக்கப்படும். கடைசி வழிபாடு முடிந்த பின் அனைவருக்கும் உணவு பரிமாறப்படும்.
சூரிய பிரதிபலிப்பு
தென் இந்தியாவின் சில பகுதிகளில், தண்ணீர் நிரப்பியுள்ள ஒரு பாத்திரத்தில் விழும் சூரியனின் பிம்பத்தை பார்க்கும் சடங்கு ஒன்று உள்ளது. சில சமுதாயனத்தினர் அந்த நீரில் மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து, அந்த நீரில் சூரிய பிம்பத்தை பார்ப்பார்கள். கை விரல்களின் இடைவெளி வழியாக சூரியனை பார்ப்பது மற்றொரு தனித்துவமான சடங்காக கடைப்பிடிக்கப்படுகிறது.
இது அறுவடை திருவிழா என்பதால், புது பயிர்களை அறுவடை செய்து, சமைத்து கடவுளுக்கு முதலில் படைக்கப்படும். இத்திருவிழா தொடர்ந்து நாலு நாட்களுக்கு கொண்டாடப்படும். பொங்கல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் ஒரு தனித்துவமான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை கொண்டுள்ளது. பண்டிகையின் முதல் நாள் போகி பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. அதிகமாக அறுவடை செய்ய, இந்நாளில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இந்திர பகவானை வணங்குவார்கள்.
பண்டிகையின் இரண்டாவது நாளை சூர்ய பொங்கல் என்று அழைப்பார்கள். அறுவடை சிறப்பாக நடந்திட உதவிடும் சூரியனை இந்நாளில் வணங்குவார்கள். பண்டிகையின் மூன்றாவது நாளை மாட்டுப் பொங்கல் என்று அழைப்பார்கள். இந்நாளில், மாடு மேய்ப்பவர்கள், தங்களின் மாடுகள் மற்றும் காளைகளுக்கு நன்றியை செலுத்துவார்கள். பண்டிகையின் நான்காம் நாளை காணும் பொங்கல் என்று அழைப்பார்கள்.
கடைசி நாளில் தான் சொந்த பந்தங்களை பார்க்க அவர்கள் வீட்டிற்கு செல்வார்கள். இந்தியாவில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதமான சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இத்திருவிழக்களின் வலிமையை காத்திட பழங்காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் இன்றளவும் கூட கடைப்பிடிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அதனால் பொங்கல் பண்டிகையில் பின்பற்றப்படும் சடங்குகளை இப்போது பார்க்கலாமா?
சூர்ய பூஜை
பொங்கல் பண்டிகையில் வழிபடப்படும் முக்கிய கடவுள் சூரிய பகவான். அதனால் சூரிய பகவானை வழிப்படுவதை சுற்றி தான் அனைத்து சடங்குகளும் நடைபெறும். பொங்கலன்று வீட்டிற்கு வெளியே இப்பூஜை நடைபெறும்.
பொங்கல் கோலம் போடுவது
பூஜைக்காக தேர்ந்தெடுக்கப்படும் இடத்தை நன்றாக சுத்தம் செய்த பின்னர், அங்கே சூரிய கோலம் போடப்படும். வெள்ளை கோல மாவை கொண்டு ரங்கோலி வகை போல் போடப்படுவது தான் கோலம் என்பதை நாம் அனைவருமே அறிவோம். சூரிய பகவானின் முகமும் கோலத்துடன் சேர்ந்து வரையப்படும். மயில், கரும்பு, பொங்கும் பொங்கல் மற்றும் வளமையை குறிக்கும் படங்களையும் கோலமாக போடுவார்கள்.
உணவு
பொங்கல் பூஜையில் உணவுகளும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்நநாளில், வீட்டிற்கு வெளியே சர்க்கரைப் பொங்கல் விசேஷமாக செய்யப்படும். மூன்று கரும்புகள் ஒன்றாக கட்டப்பட்டு செங்குத்தாக நிறுத்தப்படும். மஞ்சள் செடி கட்டப்பட்ட பானையில் சர்க்கரைப் பொங்கல் சமைக்கப்படும்.
வழிபாடு (இறை வணக்கம்)
பொதுவாக பொங்கல் கொண்டாடும் போது சூர்ய அஷ்டோடரம் அல்லது காயத்ரி மந்திரம் ஓதப்படும்.
பூஜைகளுக்கு பின்
போச்சி முடிந்தபின், புனித நீரும், பூக்களும் கோலத்தின் மீதும் சர்க்கரைப் பொங்கலின் மீதும் தெளிக்கப்படும். கடைசி வழிபாடு முடிந்த பின் அனைவருக்கும் உணவு பரிமாறப்படும்.
சூரிய பிரதிபலிப்பு
தென் இந்தியாவின் சில பகுதிகளில், தண்ணீர் நிரப்பியுள்ள ஒரு பாத்திரத்தில் விழும் சூரியனின் பிம்பத்தை பார்க்கும் சடங்கு ஒன்று உள்ளது. சில சமுதாயனத்தினர் அந்த நீரில் மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து, அந்த நீரில் சூரிய பிம்பத்தை பார்ப்பார்கள். கை விரல்களின் இடைவெளி வழியாக சூரியனை பார்ப்பது மற்றொரு தனித்துவமான சடங்காக கடைப்பிடிக்கப்படுகிறது.
Sunday, January 12, 2014
ஏகாதசி விரதத்தின் மகத்துவம்
இப்போது ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி காண்போம்? இராவணனின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத சுக்லபட்ச (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர்.
பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார்.
முக்கோடிதேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கபடுகிறது . திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை இருந்து பின் கடலைகடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது.
இந்தயோசனையை அவருக்கு பக்தாப்யர் என்ற முனிவர் கூறினார். இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும் . மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம். ஒருவருடம் முழுவதும் ஏகாதசிவிரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹா ராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை, அம்பரீஷ மஹாராஜாவை திருமாலின் சுதர்சன சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.
திருக்குறுங்குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராக்ஷனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.
ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்தவிரதத்தை தானும் கடைப்பிடித்து தன்நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்றபெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது. பீமன் ஒர் ஆண்டுமுழுவதும் இந்தவிரதத்தை செய்யமுடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தைமட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.
பாற்கடலில் மந்தாரமலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும்கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருக்ஷேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்தநாள்தான் என்பது குறிப்பிடத்தக்கது .
பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார்.
முக்கோடிதேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கபடுகிறது . திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை இருந்து பின் கடலைகடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது.
இந்தயோசனையை அவருக்கு பக்தாப்யர் என்ற முனிவர் கூறினார். இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும் . மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம். ஒருவருடம் முழுவதும் ஏகாதசிவிரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹா ராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை, அம்பரீஷ மஹாராஜாவை திருமாலின் சுதர்சன சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.
திருக்குறுங்குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராக்ஷனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.
ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்தவிரதத்தை தானும் கடைப்பிடித்து தன்நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்றபெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது. பீமன் ஒர் ஆண்டுமுழுவதும் இந்தவிரதத்தை செய்யமுடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தைமட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.
பாற்கடலில் மந்தாரமலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும்கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருக்ஷேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்தநாள்தான் என்பது குறிப்பிடத்தக்கது .
Sunday, January 5, 2014
வைகுண்ட ஏகாதசி தினத்தில் இறந்தால் முக்தி கிடைக்குமா?
வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது.
ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி. இன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.
ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி. இன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.
Subscribe to:
Posts (Atom)






