Showing posts with label முருகன். Show all posts
Showing posts with label முருகன். Show all posts

Saturday, June 22, 2013

ஆயிரக்கணக்கா​ன பக்தர்கள் புடைசூழு தேர் ஏறி அருள்பாலித்தா​ர் பேர்ண் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணி​யர் (வீடியோ இணைப்பு)

ஐரோப்பா கண்டத்தில் அல்ப்ஸ் மலைத்தொடரின் மத்தியிலே சுவர்ண குபேர பூமியாகிய சுவிற்சர்லாந்து தேசத்தின் தலைநகரம் பேர்ண் மாநகரில் எழுந்தருளியுள்ள கலியுகவரதன் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியரின் பிரம்மோற்சவத்தில் வைகாசித் திங்கள் 30ம் நாள் (12.06.2013) புதன் கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா 25.06.2013 அன்று வைரவர் மடையுடன் நிறைவடைகின்றது.

 
இந்த ஆலயம் 1992ம் ஆண்டிலிருந்து பேர்ண் நகரப்பகுதியில் அமைந்து சுவிஸ் பேர்ண் மக்களுக்கு அருள்பாலித்து வந்ததுடன் தற்போது நகரத்திற்கு வெளியே சொந்த நிலத்தில் பிரம்மாண்டமான கட்டடத்தில் அமையவுள்ளதை உலக சைவ மக்களுக்கு அறியத்தருகின்றோம்.
 
இதேவேளை தற்போது இடம்பெறும் திருவிழாவானது பேர்ண் நகரத்தில் அமைந்துள்ள ஆலயத்தின் இறுதி திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த வருடம் புதிதாக அமையவுள்ள இந்த ஆலயத்தில் மகோற்சவ விஞ்ஞாபனம் சிறந்த முறையில் இடம்பெறும் என சுவிஸ் மக்கள் எதிர்பார்ப்பதுடன் ஆலய நிர்மாணப் பணிகள் தங்கு தடையின்றி செவ்வனே நிறைவேற வேண்டும் என்றும் கதிரவன் குழுமமும் பிரார்த்தனை செய்கின்றது.
 
 
 
இன்று 10ம் திருவிழாவாக தேர்த்திருவிழாவில் நாதஸ்வரங்கள், மேளங்கள் முழங்க பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த முருகப்பெருமான் அனைவருக்கும் அருள்பாலித்ததுடன், பக்தர்களும் தமது நேர்த்திக்கடன்களை காவடி, கற்பூர சட்டி, பாற்குடம் எடுத்தும் நிறைவேற்றியமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
 
   சுவிஸ் பேர்ண் ஸ்ரீ கல்யாணமுருகன் தேர்த் திருவிழா
        

சுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலயத்தில் ஆறாம் திருவிழாவில் இடம்பெற்ற பிரம்மாண்டமான மேளச் சமா
         

கோயில் ஆலய பரிபால சபை தலைவர் ஆறுமுகம் பரமேஸ்வரன் அவர்களின் செவ்வியும், மற்றும் ஆலய குருமார்களுடனான செவ்வி. 
 
  
              

Sunday, July 22, 2012

யார் இந்தக் குழந்தை?

இன்றைக்கு இங்கே ஏதோ விசேஷம் போலும். இந்த இடமே எத்தனை குதூகலமாக இருக்கிறது! வாருங்கள், நாமும் கொஞ்சம் வேடிக்கை பார்ர்கலாம்!

நேற்று வரை பசேலென்று மட்டுமே இருந்த மரங்களெல்லாம் இன்று பூத்துக் குலுங்குகின்றன. புள்ளிமான் குட்டிகள் புதர்ச் செடிகளின் பின்னால் ஒளிந்து கொண்டு தம் தாய் மான்களுடன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றன!



கருங்குயில்கள் யாரையோ எதிர்பார்ப்பது போல் வரவேற்பு கீதம் பாடுகின்றன. மூங்கில்களின் துளைகளில் புகுந்து புறப்படும் காற்று அதற்கேற்ப கானம் இசைக்கிறது. எப்போதும் மென்மையாகத் தவழும் தென்றல் கூட இன்று சற்றே அதிகமான துள்ளலுடன் ஜதி போடுகின்றது.

மயில்கள் “என்னைப் பார் என்னழகைப் பார்” என்று தம் பெரிய தோகைகளை ஒய்யாரமாக அசைத்து நடனம் புரிகின்றன. சின்னஞ்சிறு அணிற் பிள்ளைகளும், வெள்ளை வெளேர் முயல் குட்டிகளும், தம் கருகரு கண்களை அகல விரித்து, அந்த நடனத்தைக் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றன!

அதோ, அந்தப் பொய்கையில் நேற்று வரை அமைதியாகத் தளும்பிக் கொண்டிருந்த தண்ணீர், இன்றைக்கு எதனாலோ பூரிப்பு தாங்காமல் சளசளத்துக் கொண்டிருக்கிறது!

அதோ… கங்காதேவி பாய்ந்து வருகிறாள். அவளுடைய நீண்ட கரங்களில் எதையோ தாங்கி வருகிறாள். ஆம், செஞ்சடையானின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த நெருப்புச் சுடர்களைத்தான் ஏந்தி வருகிறாள். அவளாலேயே அவற்றின் வெம்மையைத் தாங்க முடியவில்லை போலும். வந்த வேகத்தில் நெருப்புச் சுடர்களை அதற்காகவே காத்திருக்கும் நமது பொய்கையில் விடுகிறாள்.

அழகான ஆறு தாமரை மலர்கள் மலர்ந்து மகிழ்ந்து அவற்றைக் குழந்தைகளாய் வாங்கிக் கொள்கின்றன!

அந்தக் குழந்தைகள்தான் எவ்வளவு அழகு!

ஒரு குழந்தை தன் சின்ன முகத்தைச் சுளுக்கிக் கொண்டு அழுகிறது.

ஒன்று ஈறுகள் தெரிய கலகலவெனச் சிரிக்கிறது.

மற்றொரு குழந்தை கட்டை விரலை வாயில் வைத்து சுவாரஸ்யமாகச் சூப்புகின்றது.

இன்னொரு குழந்தை தான் படுத்திருக்கும் தாமரை மலரின் இதழை இழுத்து விளையாடுகிறது.

மற்றுமொரு குழந்தை தன்னுடைய கருகமணி விழிகளைச் சுழற்றி, மான் கூட்டங்களையும் மயில் ஆட்டங்களையும் வேடிக்கை பார்க்கிறது.

ஆறாவது குழந்தையோ தியானத்தில் ஆழ்ந்து விட்டது போல அமைதியாக இருக்கிறது.
கார்த்திகைப் பெண்கள் ஆசையுடன் வளர்க்கும் அந்த ஆறு குழந்தைகளையும் அன்னை பராசக்தி கண்டதும், அவற்றின் மீது அன்பு மீற, ஒன்றாகச் சேர்த்து அரவணைத்துக் கொள்கிறாள்.

அந்தக் குழந்தைக்கு உகந்த நாளான இன்று நாமும் அவனை மனமார வாழ்த்துவோம்!






முருகா போற்றி கந்தா போற்றி!
முத்தமிழ் தந்த குமரா போற்றி!

அழகா போற்றி அமுதா போற்றி!
பழகிய திருக்கை வேலா போற்றி!

முக்கண் முதல்வன் மைந்தா போற்றி!
நெற்றிக் கண்ணில் பிறந்தாய் போற்றி!

பித்தன் பெற்ற முத்தே போற்றி!
சித்தம் நிறைந்த செவ்வேள் போற்றி!

ஆனை முகனின் இளையோய் போற்றி!
ஆறு முகங்கள் கொண்டாய் போற்றி!

மாலவனின் எழில் மருகா போற்றி!
வேலெடுத்து வினை களைவாய் போற்றி!

சக்தியின் கரங்களில் தவழ்ந்தாய் போற்றி!
அத்தனுக் கரும்பொருள் சொன்னாய் போற்றி!

பக்தியிற் சிறந்தோற் கருள்வாய் போற்றி!
நித்தமும் உன்பதம் பணிந்தோம் போற்றி!!


--கவிநயா