காலை 7 மணியளவில வசந்த மண்டப பூசைகளை முடித்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள்பாலிக்கும் முகமாக கந்தப்பெருமான் தேரில் ஏறினார்.
கொழுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது புலம்பெயர் தமிழர்கள், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட ஆயிரம் ஆயிரம் பக்தர்கள் முருகப்பெருமானின் அருள் வேண்டி ஆலயச் சூழலில் சங்கமித்திருந்தனர்.
மேளதாழங்கள் முழங்க, பக்தர்களின் தேவாரத் துதிப்பாக்களுடன் முருகப்பெருமான் தேரேறி வலம் வந்தார்.
பக்தர்களும் தனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் முகமாக கற்பூரச்சட்டி, காவடி, தூக்குக்காவடி, பிரதட்டை போன்றவற்றை மேற்கொண்டனர்.
காலை 9.40 மணியளவில் மீண்டும் தேரடிக்கு வந்த முருகப்பெருமான் விசேட பூஜைகளுடன் பச்சை அலங்காரம் சாத்தப்பட்டு ஆலயத்தினுள் சென்றார்.
இதேவேளை ஆலயச் சூழலில் பல்வேறு சமய நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அடியவர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டன.
மேலதிக படங்கள் http://www.kathiravanphotos.com/ தளத்தில் விரைவில்!...
No comments:
Post a Comment