Monday, December 31, 2012

மனப்புயலை அடக்கிவிடு-(பகவத் கீதை)

* தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால்
 குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை  தோன்றுவதே சமநிலையாகும்.
 இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி



அமைதியாக  வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.

* சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி
 அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும்
 வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக
 மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த
 யோகியாகிறான்.

* எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு
 கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப்
 படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள்,
 சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில்
 நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.

* ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை
 துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து,
 விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது
 ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை
 அடக்க வேண்டும்.

* வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது.
 அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால
 நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக்
 கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை.

* சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும்,
 விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல்
 இருப்பான்

கடவுளே அறிவின் வடிவம்!

* உடலுக்கு உயிர் எப்படி அவசியமோ, அது போலவே உயிருக்கு
 அறிவு அவசியம். ஒருவருக்கு கிடைக்கும் செல்வத்திற்கு அறிவு
 மட்டுமே வேராக இருக்கிறது. அறிவே,


வலிமைகளில் எல்லாம்
 உயர்ந்ததாகத் திகழ்கிறது. அறிவின் சொல்படிதான் மனமும்
 செயல்பட வேண்டும். அத்தகைய மனிதனே அனைத்திலும் முன்னிலை
 பெறுவான்.

* அறிவால் உயர்ந்தவர்களே, வாழ்க்கையில் அனைத்து
 நிலைகளிலும் சிறப்பிடம் பெற்று உயர்கிறார்கள். செல்வத்தால்
 உயர்ந்திருப்பவர்களைக் காட்டிலும், அறிவால் சிறந்தோரே
 உண்மையில் உயர்ந்தவர் ஆவர். அறிவாளிகளை யாரும்
 அடிமைப்படுத்தவோ, கீழ்த்தரமாகவோ நடத்தவோ முடியாது. இவர்கள்
 யாருக்கும் அச்சப்படுபவர்களாகவும் இருக்கமாட்டார்கள்.

* பரிபூரணமான அறிவைப் பெற்றிருப்பவர்கள், எப்போதும்
 தெளிந்த நிலையிலேயே இருப்பார்கள். இவர்கள் எந்த
 இன்பத்திற்கும் அடிமையாகாமல், தம்மை அடக்கி
 வைத்திருப்பார்கள். ஒரு பொருளை பார்த்தவுடன் அதன்
 வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து கணிக்காமல், அதன்
 உட்பொருள் தன்மையையும், உண்மை நிலையையும் எளிதில் கணித்து
 விடுவார்கள்.

* மனிதர்கள் சிறந்து திகழ அறிவு தேவை. கடவுளே அறிவின்
 வடிவமாக இருக்கிறார். அந்த அறிவாகிய இறைவன் உள்ளே
 வருவதற்கு இதயம் சுத்தமாக இருக்க வேண்டும். இதயத்தை
 சுத்தப்படுத்த இறைவனிடத்தில் பக்தி செலுத்த வேண்டும்.

அப்பாவிகளைத் தண்டிக்காதே-(புத்தரின் பொன்மொழிகள் )

அப்பாவிகளைத் தண்டிக்காதே

* தியானத்தின் மூலம் ஞானம் கிடைக்கிறது. தியானத்தின்
 குறைவால் ஞானம் குன்றிவிடுகிறது. திருப்திதான்
 பெருஞ்செல்வம்.

* தீமை புரிபவன் இந்த உலகில் துன்புறுகிறான்.
 மறுமையிலும் துன்புறுகிறான். இரண்டிலும் அவனுக்குத் துன்பமே.

தான் செய்த தீமையைப் பற்றி நினைக்கும்போது அவன்
 துன்புறுகிறான். தீய பாதையில் செல்லும்போது இன்னும்
 அதிகமாய்த் துன்புறுகிறான்.

* காஷாய ஆடைகளால் தோள்களை மூடிக் கொண்டிருப்பவர்களிலும்
 கூட பலர் தன்னடக்கமின்றி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள்.
 அத்தகைய தீமை புரிபவர்கள் தங்கள் தீச்செயல்களாலேயே நரகத்தை
 அடைகிறார்கள்.

* குற்றமற்றவர்களைத் தண்டித்துத் தீங்கு செய்கிறவன்,
 கூர்மையான வேதனை, வியாதி, உடற்குலைவு, பெரும் விபத்து,
 சித்தப்பிரமை, அரசு தண்டனை, பயங்கரமான குற்றச்சாட்டு,
 உறவினர்களை இழத்தல், அனைத்து செல்வம் இழப்பு, நெருப்பாலோ,
 இடியாலோ அவன் வீடு எரிந்துபோதல் ஆகிய துன்பங்களில் ஒன்றை
 உறுதியாகக் காண்பான். மரணத்தின்போதும் அந்த வறட்டு மூடன்
 துக்கத்தில்தான் மறுஜனனம் காண்கிறான்.

* கருத்துடைமையில் களிப்புறு; உன் எண்ணங்களைக் கட்டிக்
 காத்துக்கொள்; சோர்வுறாதே. சேற்றில் விழுந்த யானையைத்
 தூக்கி விடுவதுபோல் உன்னைத் தீயவழியிலிருந்து
 மீட்டுக்கொள்.

* வெளிப்புறத்தைக் கழுவியது போதும்! உட்புறத்தைக்
 கழுவுவதே எனக்குத் தேவை.

* நம்பிக்கை, ஒழுக்கம், வீரியம், சித்தம், நடுவுடைமை,
 தர்மத்தை ஆராய்ந்து தெளிதல், அறிவு, நற்பயிற்சிகள்,
 சிந்தனை ஒருமிப்பு – இவற்றில் பரிபூரண நிறைவு பெற்றால்,
 துன்பங்களை விரட்டி விடலாம்.

கருணை உள்ளம்; கடவுள் இல்லம்!

ஒருவர் பணமின்றி, சாப்பாட்டுக்கே திண்டாடுகிறார் என்றால், அதற்கு காரணம், அவர் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவு தான்.



இறைவனால் தரப்பட்ட இந்த தண்டனையை ஏற்று, இந்தப் பிறவியிலாவது மற்றவர்களுக்கு நன்மையைச் செய்தால், அவருக்கு இறைவனின் அருட்கடாட்சம் நிச்சயம் கிடைக்கும். இந்த உண்மையை உணர்த்துவதே அட்சய திரிதியை கொண்டாட்டத்தின் நோக்கம்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன், மலை நாடு எனப்பட்ட கேரளம், வளம் கொழிக்கும் பூமியாக இருந்தது. அவரவர் வீட்டுத் தோட்டத்தில் கிடைக்கும் பொருட்களே குடும்பத் தேவைக்கு போதுமானதாக இருந்தது. ஆனால், ஒரு அந்தணர் தம்பதியின் தோட்டத்தில் எதுவுமே விளையவில்லை. இதற்கு காரணம், அவர்களது கர்மவினை. அவர்கள் சாப்பாட்டுக்கே திண்டாடினர்.


இருந்தாலும், அந்த ஏழைத் தம்பதியர் ஆச்சார அனுஷ்டானங்களைத் தவறாமல் கடைபிடித்து வாழ்ந்தனர். அந்தணர் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்கப் போவார்; எல்லாரும் அநேகமாக பிச்சை போடுவர். ஆனாலும், சில நாட்கள் முன்வினை பாவம் விரட்டும். அன்று எல்லாருமே கையை விரித்து விடுவர். இவரும், இவரது மனைவியும், பட்டினி கிடப்பர்.

இந்த வீட்டுக்கு, ஒருநாள் பிச்சை கேட்டுச் சென்றார் ஆதிசங்கரர். இவர், காலடி என்ற ஊரில் பிறந்தவர். சிறு வயதிலேயே இறையருளால் துறவறம் ஏற்றவர். வாசலில் நின்று ‘அம்மா, பிச்சையிடுங்கள்…’ என்று கேட்டார். அப்போது, அந்தணர் வீட்டில் இல்லை. அந்த அம்மையார் வெளியே எட்டிப் பார்த்தார்.

பால பருவத்தில் தேஜசான முகத்துடன் நின்ற துறவியைப் பார்த்ததுமே, ஏதாவது கொடுக்க வேண்டும் என்று மனதில் தோன்றி விட்டது. முதல்நாள் ஏகாதசி என்பதால், வீட்டில் விரதம். துவாதசியன்று அந்தணருக்குக் கொடுப்பதற்காக, அவர் என்றோ வாங்கி வந்த, உலர்ந்து போன நெல்லிக்கனி ஒன்று இருப்பது நினைவுக்கு வந்தது. அதை எடுத்து வந்து சங்கரரிடம் கொடுத்தாள்.

எவ்வளவு ஏழ்மையில் இருந்தாலும், எது நம்மிடம் இருக்கிறதோ அதை கேட்பவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதுதான் நிஜமான தர்மம். அந்த தர்மத்தை, அந்தப் பெண் அனுஷ்டித்தாள். நெகிழ்ந்து போனார் சங்கரர் .
‘அம்மா… மகாலட்சுமி! இவர்களைப் போன்று, இருப்பதைக் கொடுக்கும் மனமுள்ளவர்களிடம் அல்லவா நீ இருக்க வேண்டும்! இந்த வீட்டுக்குள் நீ வர மறுப்பது ஏன்?’ என்றார். அப்போது அசரீரி ஒலித்தது.
‘அவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனை அனுபவிக்கின்றனர். இன்னும் பாக்கி யிருக்கிறது. அது, முடியட்டும், பார்க்கலாம்…’ என்றது.


உடனே சங்கரர், ‘அம்மா… இரக்கமுள்ளவள் நீ. இன்று இப்படிப்பட்ட நல்ல மனதுக்கு சொந்தக்காரர்களான இவர்கள், முற்பிறவியில் என்ன செய்திருந்தால் தான் என்ன… நீ நினைத்தால் அதைக் களைய முடியாதா?’ என்று பாடினார். கனகதாரா ஸ்தவம் எனப்படும் இந்த ஸ்லோகங்களின் முடிவில், லட்சுமியே இரக்கப்பட்டு, அந்தக் குடிசை வீட்டில் தங்க நெல்லிக்கனிகளாக விழச் செய்தாள். அந்த ஏழைகள் தங்கள் வறுமை நீங்கி, பிறருக்கும் வாரிக் கொடுத்தனர். நாம், என்ன பாவத்தை அனுபவித்தாலும் சரி… பிறர் நன்றாக இருக்க வேண்டுமென நினைக்க வேண்டும். அப்படி நினைத்தால், நம் கருணை உள்ளம் கடவுள் வாழும் இல்லமாக இருக்கும்.

***
அட்சய திருதியை அன்று செய்யும் தானத்தின் பலன்கள்…
* நலிந்தவர்களுக்கு உதவி செய்தால், மறு பிறவியில் ராஜயோக வாழ்க்கை     அமையும்.
* ஆடைகள் தானம் கொடுத்தால், நோய்கள் நீங்கும்.
* பழங்கள் தானம் கொடுத்தால், உயர் பதவிகள் கிடைக்கும்.
* நீர், மோர், பானகம் போன்றவை கொடுத்தால், கல்வி வளம் கிடைக்கும்.
* தானியங்கள் தானம் கொடுத்தால், அகால மரணம் ஏற்படாது.
* தயிர்சாதம் தானம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும்.
* புண்ணிய நதிகளில் நீராடி, இறைவனை தொழ, வாழ்வில் குறையாத செல்வம் பெருகும்.

Saturday, December 15, 2012

புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் வரலாறு.

யாழ்ப்பாணக்குடாநாட்டின் வடமேற்குப்பகுதியில் சப்ததீவுக்ளுக்கு நடுவிலே அமைந்து சிறப்புற்று விழங்குவது புங்குடுதீவு. இங்கே சிறியதும் பெரியதுமாய் அறுபதுக்கு மேற்ப்பட்ட சைவ ஆலயங்கள் அமைந்திருந்து சிறப்புச்சேர்க்கின்றன.

இவற்றிலே பன்னிரண்டு அம்மன் ஆலயங்களாக இருந்த போதிலும் அவற்றில் இரண்டு முருகன் ஆலயங்களாக காலப்போக்கிலே மாற்றமடைந்துவிட்டன. கண்ணகை அம்பாள், குறிகட்டுவான் மனோண்மணி அம்பாள், முத்துமாரி அம்பாள், காளிகா பரமேஸ்வரி அம்பாள், மாவுதிடல் மலையடி நாச்சியார், கள்ளிக்காடு துர்க்கை அம்பாள், பட்டயக்கார அம்பாள், கண்ணகிபுரம் பத்திரகாளி அம்பாள், பிட்டிவயல் நாச்சிமார், இத்தியடி நாச்சிமார் (நாகபூசணி அம்பாள்) என்பனவே ஏனைய பத்து சக்தி பீடங்களுமாம்.





இவற்றுள்ளே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே சிறக்கப்பெற்று வரலாற்றுச்சிறப்புமிக்கதாய் புங்குடுதீவின் தெற்கு கடற்கரையோரத்தில் ஏறத்தாள ஆயிரம் பரப்பு நிலத்திலே
சித்திரமணி மகுடம் பத்மமலர் வதனமும்
செம்பவள வாய் முறுவலும்
சிந்தூரப் பொட்டழகும் செய்ய விருகாதினில்
திகழும் பொற் கொம்பினழகும்
முத்து மூக்குத்தியும் நெஞ்சிற் பதக்கமும்
முருகுதவழ் மலர் மாலையும்
முத்தாரம் கையினிற் கடகமும் கணையாழி
மொய்த்திட்ட விரலினழகும்
கொத்துமணிமேகலையும் வஞ்சி
நுண்ணிடை – யழகும்
கோகனகப் பாதச் சிலம்பும்
கோடானகோடி யருணோதயப் பிரகாசமும்
கொண்ட நின் காட்சி யடியேன்
எத்தனை விதங்கள்தான் ஒண்ணிருங் காணாது
ஏங்குதே நெஞ்சமம்மா!
எழிலாரும் புங்கைநகர் தென்கரையில்
தங்கி வாழ் இராஜராஜேஸ்வரி அம்மையே!
என்று எல்லோரும் போற்றி வழிபட்டு பேறடையும் வண்ணம் அமைந்திருப்பது கண்ணகை அம்மன் என வழங்கும் அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகும்.

புங்குடுதீவிலே வாழ்ந்த நிலச்சுவாந்தர்களில் ஒருவராகிய கதிரவேலு ஆறுமுகம் உடையார் என்பார் ஒரு பொழுது ஒரு பேழையினை புங்குடுதீவின் தென்கிழக்கு கடற்கரையிலே கோரியா என்னும் இடத்தில் கண்டெடுத்தார். அப்பேழையினை எடுத்து வந்து தற்போது இவ்வாலயம் அமைந்துள்ள இடத்திலே இருந்த பழமையான பூவரசம் மரத்தின் கீழே வைத்து திறந்து பார்த்தபோது அங்கே ஒளிமயமாகிய ஒரு அம்பாள் சிலை காணப்பட்டது. உடனே ஆறுமுகம் உடையார் ஊர்மக்களின் உதவியோடு அங்கே சிறியதொரு கோயிலை அமைத்து வணங்கி வந்தனர். கண்ணகி அம்மனை பேழையுடன் வைத்த நானூறு வருடங்கள் பழமையான பூவரசு மரம் தலவிருட்சமாகியது. இச்சம்பவம் நடைபெற்றது 15ம் நூற்றாண்டாயிருத்தல் வேண்டும்
காலத்துக்கு காலம் இவ்வாலயம் புனரமைக்கப்பெற்று வந்து நாளடைவிலே சுண்ணக்கல்லினாலே நிரந்தரக்கட்டடம் அமைக்கப்பெற்றது. 1880ம் ஆண்டிலிருந்து நித்திய நைமித்திய பூசைகள் ஒழுங்காக நடைபெற்த்தொடங்கியது.

1931ம் ஆண்டு கோவில் புனரமைப்புச்செய்யப்பட்டு கும்பாபிடேகம் நடைபெற்றது. இதன்போது கருவறையில் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாளும், இரண்டாம் மண்டபத்தின் வடக்குப்புறத்தில் தெற்கு முகமாக, தெற்கு வாசலின் ஊடாக சமுத்திரத்தை நோக்கியதாக ஸ்ரீ கண்ணகை அம்பாளும் பிரதிட்டை செய்யப்பட்டனர். இவ்வாண்டு கோயில் திருவிழா சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது.
1944 இல் கோவில் மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிடேகம் நடைபெற்றது. 1957இல் ஆலயத்தின் சுண்ணாம்புக் கட்டடம் அனைத்தும் சீமெந்துக் கட்டங்களாக மாற்றம்பெற்றன. இதன்பின் 1964இல் கும்பாபிடேகம் நடைபெற்றது. 1957 இல் ஆரம்பிக்கப்பட்ட இராஜகோபுர வேலைகள் மற்றும் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட சித்திரத்தேர் வேலைகளும் 1979இல் நிறைவு செய்யப்பட்டதோடு நைமித்திய பூசைகள் சித்திரா பௌர்ணமியை ஆரம்பமாய் கொண்டு 15 நாட்களாக மாற்றப்பட்டது. 1954ம் ஆண்டில் இவ்வாலயத்தில் நடைபெற்ற சிலப்பதிகாரப் பெருவிழாவின் சிறப்புப்பற்றி இன்றும் பேசப்படுகின்றது.

பொன்பெருகு சைவநெறிப்
புண்ணியம்பொலியமறை
பூத்தவாகமங்கள் பொலியப்
புராணவிதிகாசங்கள் தருநீதி நிறை பொலியப்
பொழிந்த திருமுறைகள் பொலிய
அன்புநாண் ஒப்புரவு
கண்ணோட்டம் வாய்மையெனும்
ஐந்துமுயர் சால்பு பொங்கும்
ஆனந்த சமுதாய ஞானவொளி பொலியமெய்
யடியாரும் தமிழும் பொலிய
முன்புதொடுவினை நீக்கி முத்தியுறு பணியாக்கி
முந்துமன் னுயிர்கள் பொலிய
முத்துநவ ரத்தின மிசைத்த மணித் தேரேறி
முதுவீதி வருமன்னையே
இன்பமிகு நின்பாத பங்கயமலர்ந்த சுக
மெங்களுக் கினிதருளுவாய்
எழில்வாரிப் புங்குநகர் வந்த கண்ணகித்தாயே!
இராஜராஜேஸ்வரியே!

Sunday, December 9, 2012

கடவுளைக் கேவலப்படுத்தும் கயவர்கள் யார்? பக்தர்களா? கடவுள் இல்லை என்பவர்களா?


உதைத்தால் கடவுளும் கூட...
அடி உதவுவது போல, அண்ணன் தம்பி உதவமாட்டார்கள். அடியாத மாடு படியாது. ஆணை அடித்து வளர்க்கணும். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். இப்படி எத்தனை, எத்தனையோ பழமொழிகள் தமிழில். தமிழனின் வாழ்க்கை அனுபவங்களைக் கூறும் வகையில் இவை அமைந்துள்ளன எனக்கூடக் கூறலாம்.

ஓடப்பராயிருக்கும், ஏழையப்பர், உதையப்பராகிவிட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிடுவார், உணரப்பா நீ என்றே கூறிவிட்டார் புரட்சிக் கவிஞர்,.

அடித்துத் திருத்த முடியாது, அன்பால் திருத்தலாம் என்பர் மென்மனம் கொண்டோர். எது எப்படி இருப்பினும் அடித்து வேலை வாங்கினால்தான் சரிப்படும் என்பவர்களைத் திருத்தவே முடியாது. அவர்களின் தத்துவம் சரி என்கிற நினைப்பு கூட வந்துவிடுகிறது நமக்கு,. கடவுள் ஒன்றுக்கு ஏற்பட்ட கதையைக் கேட்கும்போது!

நெல்லை, பாளையங்கோட்டையில் இருக்கும் எத்தனையோ கோயில்களில் ராஜகோபாலன் கோயிலும் ஒன்று. வைணவக் கோயில் என்பதை நாம் சொல்லித் தெரிந்து கொள்ளத் தேவையில்லை ஒருபக்கம் ருக்மணி பெண்டாட்டி. மறு பக்கம் சத்யபாமா சகதர்மிணி. இரண்டு பெண்டாட்டிக்கார கடவுள் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் குந்திக் கொண்டுள்ளது. இந்த லட்சணத்தில் இது உற்சவராம்-. தெருத் தெருவாக இதைத் துக்கிக் கொண்டு அலைவர் அய்யங்கார்கள்.

இந்தப் பொம்மையின் மூக்கு உடைந்த காயத் தழும்பு காணப்படுகிறது. செய்தவன் சரியாகத்தான் செய்திருப்பான் - சாமிமலையிலோ நாச்சியார் கோயிலிலோதானே கடவுள்களின் உற்பத்தி ஸ்தானம்! அவர்கள் மூக்கும் முழியுமாகத்தான் செய்திருப்பார்கள். பின் எப்படி காயம், தழும்பு-?
ராஜகோபாலன் கோயிலின் அர்ச்சகர் விஷ்ணுப்பிரியன் என்பவருக்கு எல்லாமே பெண் குழந்தைகளாம். புத்தேள் நரகம் போகாமல் தப்பிப்பதற்காக ஆண் குழந்தை வேண்டும். என்று ஆசைப்பட்டானாம். ராஜகோபாலனிடம் வேண்டிக் கொண்டாராம். அந்த முறை பிறந்ததும் பெண்ணாகவே இருந்து விட்டதாம். கையில் இருந்த அர்ச்சனைத் தட்டாலேயே கடவுள் ராஜகோபாலனைக் சாத்து, சாத்து என்று சாற்றி விட்டானாம். ராஜகோபலன் பொம்மையின் மூக்கு உடைபட்டகாயம் தானாம் அது. வேண்டுதல் பலிக்காமல் போனதற்காகக் கடவுளைப் போட்டு அடித்தான் பக்தன் என்றும் அடிவாங்கிய பிறகு, பிறந்த பெண்ணை ஆணாக மாற்றி விட்டது கடவுள் என்றும் புளுகி வைத்துள்ளார்கள்.

அப்ப, அடி உதவுவது போல எதுவும் உதவாது ஆண்டவனிடம் கூட என்பது கதைமூலம் தெரிகிறது. பக்த கோடிகள் இதனைத் திருவிளையாடல் என்கிறார்கள் என்ன பேர் வைத்தாலும், அடிதானே, உதை தானே! இப்படியெல்லாம் எழுதிக் கடவுளைக் கேவலப்படுத்தும் கயவர்கள் யார்? பக்தர்களா? கடவுள் இல்லை என்பவர்களா?

கல்லினுள் தேரைக்கும் ...

கல்லினுள் தேரைக்கும் படியளக்கிறது பரமசிவம் என்பார்கள் பக்தர்கள். எல்லார்க்கும் படியளக்-கும் பரமன் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் வழிபடப்படுவதில்லை அதனால், அந்த நாடுகளில் உள்ள தரித்திர நாராயணர்களைப் பற்றி எழுதப்போவது இல்லை, இருந்தாலும் மனதுக்குள் ஒரு நெருடல். தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்கிறோமே, இருக்கின்ற 200 நாடுகளைப் பற்றி பரமசிவன் கவலை கொள்ளக் காணோமே என்று யாரும் யோசிப்பதே கிடையாது. புண்ணிய பாரத பூமியைவிட தரித்திரத்தில் மிக மோசமான நிலையில் உள்ள வளரும் நாடுகள் எனும் பட்டம் தாங்கிய நாடுகளின் மோசமான நிலையை யாராவது சிவனிடம் சொல்லி வைக்கலாமே! இந்தியாவில் 25 விழுக்காடுக்கு மேல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் மக்கள் உள்ளனர். 10 விழுக்காட்டுக்குமேல் வேலை கிட்டாதவர்கள் உள்ளனர். இவர்களின் வயிற்றுப் பாடுக்கு ஏதாவது செய்திட வேண்டாமா? இன்னமும் பாராமுகம் ஏன் பரமனுக்கு? தேரையைவிடக்

கேவலமா, அரிதான மானிடப் பிறவிகள்?

இதுகிடக்க, கல்லினுள் தேரைக்கும் படியளந்த கதையைப் பார்ப்போமா? தேரைத்தவளை சைகிலேரனா ஆஸ்கட்டடா எனும் இனவகையைச் சேர்ந்தது. இதன் உடலில் உள்ள செல்களின் ஆற்றல் மய்யமான மைடோக் கான்ட்ரியா பகுதி, தனக்குத் தேவையான சக்தியைத் தானாகவே தயாரித்துக் கொள்ளும் தனித் தன்மை வாய்ந்தது. தாவரங்கள் தங்கள் சக்தியைத் தயாரித்துக் கொள்வதைப்போல! தாவரங்கள் எதையும் உண்ணாலேயே வளர்கின்றனவே, அதைப்போல! தவளைகள்தூங்கினாலும் இது செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆற்றலைத் தவளை பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த இனத் தவளைகளுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பான வசதி இது!

தன் உடலுக்குத் தேவையான வெப்பம், தேவைக்கேற்ப வெப்பத்தைக் கூட்டவும் குறைக்கவுமான வசதி போன்றவையும் தேரைக்கு உண்டு.
ஆகவே, தேரை சாப்பிடாமலே வாழக்கூடிய, வளரக்கூடிய, வசதிகள் அதன் உடலில் இயற்கையாகவே உள்ளன. இது தெரியாமல் பக்தர்கள் பரமசிவன், படி, அரிசி, சோறு, குழம்பு என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மாம்பழத்து வண்டு, கல்லினுள் தேரை போன்றே பல இயற்கைச் செயல்களுக்குக் காரணம் இவை எனும் அறிவில்லாத மக்கள் ஆண்டவனைக் காட்டிக் கொண்டிருக்கும் அறியாமையை அறிவியல் தோலுரித்துக் காட்டியுள்ளது.

குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக அறிவியலாளர்கள் தேரை பற்றிய ஆய்வு முடிவை அறிவித்துள்ளனர்.

சானிடரி நாப்கினுக்குப் பதிலாக...

கணவனை உயர்வாகக் கருத வேண்டும் என்பதற்காக ஒரு புராணக்கதையை எழுதி வைத்திருக்கிறார்கள். தன் கணவனை அழைக்காமல் யாகம் செய்தார் தன் தந்தை என்பதற்காக யாகத் தீயில் விழுந்து செத்த தன்மனைவியின் வெந்த உடலைத் தூக்கிக் கொண்டு சிவன் அலைந்தானாம். அவளின் பெண்குறிப் பகுதி பிய்த்துக் கொண்டு தனியே விழுந்ததாம், அசாமில் காமாக்யா எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள கோயிலின் தாத்பர்யம் அதுதானாம்.

கோயிலின் வழிபடு கடவுள், வெறும் பெண்குறி மட்டுமே! கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அதன் மேல் ஈரம் கசிந்து கொண்டே இருக்கும் வகையில் அதன் கீழே ஊற்று நீர் சுரந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இதை வணங்கிப் போகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை திருவிழாவும் உண்டு. கடந்த ஜுன் மாதம் 25 ஆம்தேதி நடந்தது. எங்கு பார்த்தாலும் சாமியார்கள் கூட்டம். சிவப்புத் துணி, முகம் முழுவதும் சிவப்புக் குங்குமம், ஓடும் நீரெல்லாம் பலி கொடுக்கப்பட்ட விலங்குகளின் ரத்தத்தால் சிவப்பாகிப் போன நிலை.

அம்பாளை வாழ்த்திப் போடப்பட்ட கோஷம் விண்ணைப் பிளந்தது. என்ன கோஷம் தெரியுமா? பிரிதிபி ரஜஷால ஹோய் என்பதே! பூமித்தாய்க்கு மாதவிடாய் வருகிறது டோய் என்பது அதன் பொருள்.

அது என்ன? மாதத்தில் மூன்று நாள்கள் மகளிர்க்கு குருதிக் கசிவு ஏற்படுவது இயற்கை. மரித்துப் போன கருமுட்டைகள் வெளியேற்றப்படும் இயற்கை வழி. காமாக்யா கடவுளச்சி அல்லவா? மாதம் ஒரு முறை என்பதற்குப் பதில் ஆண்டுக் கொரு முறை குருதி ஓட்டம் நடக்குதாம்! ஆகவே கோயிலின் கதவுகளைச் சாத்திவைத்து யாரும் பார்க்காதவாறு செய்கிறார்கள் மூன்று நாள்களுக்கு!

நான்காம் நாள் கதவைத் திறந்து காட்டுகிறார்கள். எல்லாம் கழுவிச் சுத்தமாக்கப்பட்ட கருவறைக் காட்சியைக் காணப் பக்தர்கள் கூட்டமோ, கூட்டம்! இந்த ஆண்டு 7 லட்சம் பேர்களாம்! அசாமின் கும்பமேளா கும்பலாம்! இப்படிப்பட்ட முதல் காட்சியைக் கண்ட பக்தர்கள் நினைத்ததெல்லாம் நடக்குமாம்.

இதற்கெனவே ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் அகோர் சாமியார்கள், எப்போதும் அம்மணமாகவே திரிந்து கொண்டிருக்கும் நாகா சாமியார்கள், கூட்டம் கூட்டமாகப் பாதையெங்கும் டென்ட் களில் தங்கிக் கொண்டு கூடியிருக்கின்றனர். சுடுகாட்டில் நள்ளிரவில் சக்தி வழிபாடு நடத்தும் சாமியார்களின் கூட்டமும் வந்ததாம். (சக்தி வழிபாடு பற்றிக் தெரிந்து கொள்ள "ஞான சூரியன்" படிக்கவும்)

வந்த பக்தர்களுக்குப் பிரசாதம் என்ன தெரியுமா? ரத்தக் கறைபடிந்த சிவப்புத் துணித் துண்டு நூல்திரி! குருதிப் பெருக்கு ஏற்பட்ட யோனிப் பகுதியில் வைக்கப்பட்டு மூன்று நாள்கள் இருந்த சிவப்புத் துணியின் கிழிக்கப்பட்ட பகுதிகள்! குமட்டிக் கொண்டு வருகிறதா? தெய்வீகப் பிரசாதம். குறைகூறக் கூடாது.

இந்த மதமும், பண்டிகைகளும், சடங்காச்சாரங்களும் அடங்கிய இந்துத்வா தான் இந்தியாவுக்குத் தேவை என்கிறார்கள்! சானிடரி நாப்கின் வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற விளம்பரம் தொலைக் காட்சியில் வந்தால், ஆச்சாரம், ஒழுக்கம் கெட்டுப் போச்சு எனும் மடிசார் மாமிகள் இந்த விழாபற்றி என்ன கூறுவார்கள்?

நிஷ்காம்ய கர்மம்! – வாலி


‘கடவுள் இல்லை;
 கடவுள் இல்லை;
 கடவுள் இல்லவே இல்லை!’

-சிவாஜி, பிரபு நடித்த ‘சுமங்கலி’ என்னும் படத்தில் இந்தப் பாட்டு! எழுதியது நான்; இசையமைத்தது திரு.எம்.எஸ்.வி; பாடியது திரு. டி.எம்.எஸ்.

நாங்கள் மூவரும் அக்மார்க் ஆத்திகர்கள்.

பிரபு நடித்து – இந்தப் பாட்டு, தி.நகர் பஸ் நிலையம் அருகே இருக்கும் பெரியார் சிலை யைச் சுற்றிப் படமாக்கப்பட்டது, டைரக்டர் திரு.யோகானந்தால்!

கடுமையான கடவுள் நம்பிக்கை உடைய நானும், எம்.எஸ்.வி-யும்; டி.எம்.எஸ்-ஸும் இந்தப் பாடலை – நூறு விழுக்காடு ஈடுபாட்டோடு உருவாக்கினோம். இதற்குப் பெயர்தான் ‘நிஷ்காம்ய கர்மம்’. விருப்பு வெறுப்பின்றி – நமக்கிட்ட பணியைச் செவ்வனே செய்வது தான், ‘நிஷ்காம்ய கர்மம்’.

‘காலையில் தினமும்

கண் விழித்தால் நான்

கைதொழும் தெய்வம் அம்மா!’

- ‘நியூ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை யில் நான் எழுதிய பாட்டு. ஒலிப்பதிவு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் -

“வாலி சார்! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா சொல்லக் கூடாதும்பாங்க… ‘தெய்வம்’கிற வார்த்தைக்குப் பதிலா ஏதாவது சொல்லுங்க சார்!” என்று ரஹ்மானிடமிருந்து ஃபோன் வந்தது.

“ய்யோவ்! என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு… சரி… சரி… தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ!” என்று மாற்றிக் கொடுத்தேன்.

பரத்பூஷண், மீனாகுமாரி நடித்த படம் ‘பாய்ஜூபாவ்ரா’! ஓர் இந்துக் கவிஞனைப்பற்றியது.

அதில் ‘ஓ! பகவான்!’ என்று இந்துக் கடவுளை விளித்து – தர்பாரி கானடாவில் ஓர் அற்புதமான பாட்டு!

இசையமைத்தவர் திரு.நவுஷத் அலி; இசுலாமிய நோன்புகளிலிருந்து இம்மியளவும் விலகாதவர்.

இந்தப் பாடலைப் பாடியவர் உலகு புகழ் உஸ்தாத் திரு. படேகுலாம் அலிகான் அவர்கள். மூன்று காலங்கள் அநாயாசமாக சஞ்சாரம் செய்யவல்ல சாரீரம்!

நம்ம ஊர் திரு. ஜி.என்.பி-யே – படேகுலாம் அலிகான் கச்சேரியை, மியூசிக் அகாடமியில் கேட்டுவிட்டு -அவர் பாதங்களில் விழுந்து பரவியவர்.

திரு. நவுஷத் அலிக்கும், படேகுலாம் அலிகானுக்கும் சமயப்பற்று இல்லையா? ஆயினும் அவர்கள் கடைப்பிடித்தது – ‘நிஷ்காம்ய கர்மம்’; இந்தப் பாட்டோடு அவர்களுக்கு இருந்த சம்பந்தம், படத்தளவே!

திரு.பாலுமகேந்திரா இயக்கிய படம் – ‘ராமன் அப்துல்லா’. இந்தப் படத்தில் திரு. இளையராஜா இசையில், நான் ஒரு பாட்டு எழுதினேன்.

‘ஆண்டவன் எந்த மதம்?

இந்துவா? இசுலாமா? கிறித்துவமா?’

- என்று வரும் இந்தப் பாட்டை – முழுமுதற் கடவுளாக அல்லாவையே முப்பொழுதும் கருதி – அஞ்சு வேளை தொழுகை புரியும், திரு. நாகூர் அனிபா அவர்கள் பாடினார்கள்.

பாடல் வரிகளைப் பார்த்து, அவர் மறுக்கவில்லை; அற்புதமாகப் பாடினார், தானொரு தாமரை இலைத் தண்ணீராக இருந்து! இதுதான் ‘நிஷ்காம்ய கர்மம்’!

கும்பகோணம் திரு. ஏ.டி.சுல்தான் அவர்கள் அற்றை நாளில் ஓர் அருமையான கர்னாடக சங்கீத வித்வான்!

தியாகராஜரையும், தீட்சிதரையும் – அவர் பாடி நான் கேட்டிருக்கிறேன்!

கடையநல்லூர் திரு. மஸ்ஜீத் அவர்கள் முருகன் பாடல்களைப் பாடி – ஒலிப்பதிவு நாடாக்கள் வந்திருக்கின்றன!

மகாபாரதத்தில் ஒரு கதை. ஒரு மகா முனிவன், தருக்கும் செருக்கும் ஏறி நிற்பவன்-

ஒரு குடும்பப் பெண்ணிடம் குட்டுப்படுகிறான். அவள், எங்கோ இவன் ஒரு கொக்கைக் கொன்றதைப் பேசுகிறாள்.

‘தருமம் யாதென முழுமையாய்த் தான் அறியவில்லை’ என்று அந்த முனிவன் ஒப்புக்கொண்டு -

அதைத் தனக்குக் கற்பிக்கும்படி அந்தப் பெண்ணை வேண்டுகிறான்.

அவள் – ஒருவன் பெயரைக் குறிப்பிட்டு, அங்கு போய் அவனிடம் அறத்தை அறிந்துகொள் என்கிறாள்.

அந்தப் பெண் குறிப்பிட்ட தர்மிஷ்டனின் பெயர் ‘தரும வியாதன்’; அவனிடம் முனிவன் சென்று, தனக்கு தர்மத்தை உபதேசிக்க வேண்டுகிறான்.

‘இரு; என் வேலையைச் செய்துவிட்டு வருகிறேன்!’ என்று அவன் ஆட்டை வெட்டுகிறான்; ஆம்! அவன் கசாப்புக் கடை வைத்திருப்பவன்!

வேதபாராயணங்கள்; ஹோமங்கள்; ஆகியவற்றின் முடிவில் இந்துக்களால் உச்சரிக்கப்படுவது – ‘ஓம்! சாந்தி! ஓம்!’

இந்தப் பெயரில் வந்து பெரும் வெற்றி பெற்ற படத்தின் கதாநாயகன் – ஷாரூக் கான்; இயக்குநர் புகழ்வாய்ந்த CHOREOGRAPHER ஆன, ஒரு முஸ்லீம் பெண்மணி!

B.R.சோப்ராவின் புகழ்வாய்ந்த ‘மகாபாரதம்’ டி.வி. சீரியலுக்கு உரையாடல்கள் எழுதியவர் – மகா மேதையான ஓர் உருதுக் கவிஞர்!

சுருக்கமாக நான் சொல்ல வருவது என்னவென்றால்…

படங்களில் பாட்டுகள், வசனங்கள் எழுதப்படுவதெல்லாம் -

கதைகளில்

காணுகின்ற

சமயத்துக் கேற்றபடி;

சமயத்துக் கேற்றபடி அல்ல!

நன்றி: விகடன்

கடவுள் எங்கே இருக்கிறார்?

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி
 கேள்வி கேட்கலானார்.





 “நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”

“நிச்சயமாக ஐயா..”

“கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா.”

“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

“ஆம்.”

“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

“உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா..”

“சாத்தா‎ன் நல்லவரா?”

“‏இல்லை.”

“எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”

“கடவுளிடமிருந்துதா‎ன்.”

“சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”

“ஆம்.”

“அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

“இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”

……

“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”

…….

“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”

“ஆம் ஐயா..”

“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”

“ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”

“ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

“ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?”

“நிச்சயமாக உள்ளது.”

“அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?”

“நிச்சயமாக.”

“இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.”

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

“ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). “வெப்பம் ‏இல்லை” என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

“சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?”

“ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”

“நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?”

“சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?”

“ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”

“பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”

“ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎�
 �். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”

“”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.

“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”

(பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

“அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”

(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

“யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?”

“அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”

“மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”

(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

“நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”

“அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

இது ஒரு உண்மைச் சம்பவம். ‏

இறுதிவரைப் பி‎ன்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்?

வேறு யாருமல்ல.

ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.