ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது எனவும் அம்மாதத்தில் வழிபாடு செய்வதினால் எமக்கு அநேக நன்மை கிடைக்கும் எனவும் ஏன் சொல்லப் படுகிறது, அந்த மாதத்தில் அம்பிகை எமது சங்கடங்கள், சந்தேகங்கள், சஞ்சலங்கள், துன்பங்கள், நோய்கள் என எல்லாம் தீர்த்து வைத்து காத்திருக்கிறாள். சங்கடத்தை எப்படித் தீர்க்கிறாள் என்று பார்ப்போம்.
பகவான் ஆதி சங்கரர் ஒரு சமயம் எப்படித்துதித்தார் தெரியுமா? அவர் எல்லாம் தெரிந்த ஞானி. எதுவுமே தெரியாத அஞ்ஞானி போல் தன்னைப் பாவித்து அம்பிகையைத் துதித்தாராம். அப்போது அவர் பாடிய துதி ''தேவி அபராதஷமாபண எனும் ஸ்தோத்திரம். சங்கடங்களுக்குள் உழண்டு கொண்டு மானிடர் அம்பிகைக்கு செய்யவேண்டிய உபசாரங்களைக் கூட உணராது வழிபாடு செய்யாது இருப்பதாகவும் தன்னைப்பாவித்துக் கொண்டு பாடியதுதி இது.
உலகில் பாசமில்லாத நற்குணங்கள் இல்லாத பிள்ளைகள் இருக்கலாம்.ஆனால் அன்பும் பாசமும் இல்லாத அன்னை அகிலத்தில் உண்டா கிடையாது. அப்படி இருக்கும் போது அகிலத்துக்கே அன்னையாக விளங்கும் அகிலாண்ட ஈஸ்வரி எவ்வளவு அன்பு நிறைந்த தாயாக எம்மைக் காப்பாள். அவளைத்துதி செய்து வழிபடத் தெரியாத மானிடர்க்கும் இலகுவாக இத்துதி சொல்லி வணங்கும் அடியவர்க்கு வளமான வாழ்வும் நிலையான செல்வமும் நீடித்த ஆயுளும் ஆரோக்யமும் அளித்திடு அன்னையே. என வேண்டித் துதிக்கிறார். ஆடிமாத செய்வாய் வெள்ளிக் கிழமைகளில் எளிய முறையில் இதைப்படித்தால் ஏற்றம் பெறுவது நிச்சயம். அதை நாமும் படிப்போம்.
"நமந்த்ரம் நோயந்த்ரம்ததபிச நஜானேஸ்துதி மஹோ நசாஹ்வானம் த்யானம் ததபிச நஜானே ஸ்துதிகதா"
அம்மா எனக்கு மந்திரம் தந்திரம் துதுப்பது மனதில் நிலை நிறுத்தி தியானம் செய்வது இப்படிப்பட்ட வழிபாடுகள் எதுவும் தெரியாது.
“மத்ஸம பாதகி நாஸ்தி பாபகித்வத்ஸமா நஹி ஏவம் ஞாத்வா மஹாதேவி யதாயோக்யம் ததாகுரு”
என்னைப் போல் குற்றம் செய்தவர் யாருமில்லை. பாவத்தைப் போக்கடிப்பதில் உனக்கு நிகர் யாருமில்லை. மகாதேவியே என் தேவைகளை நீயே அறிந்து அதற்குத் தக்கபடி எனக்கு அருள்புரிவாயாக. இப்படி வழிபடுகிறார்.
அவர் வேதங்களால் எளிய முறையில் ஸ்தோத்திரம் பண்ணி எமக்காக பாடுகிறார். இப்படி வழிபடச் சொல்லவும் ஆதிசங்கர மகானுக்கு அருள் செய்ததும் அந்த அம்பிகையன்றோ. அவள் அன்புக்கும் கருணைக்கும் எல்லையில்லை. மகமாயி எனைக்காத்திடு தாயே என உள்ளம் குழைந்து உருகும் நெஞ்சத்தின் துயர் தீர்க்க ஓடோடி வந்தருள் தந்திடுவாள்.
No comments:
Post a Comment