தன்னந்தனியாக அமர்ந்திருக்கும் போது தானாக வந்து விழும் வார்த்தைகளுக்கு ஒரு உருவம் தந்தால் எப்படியிருக்கும்? இதை கவிநயா அக்காவிடம் இரவிசங்கர் கண்ணபிரானிடமும் தான் கேட்கவேண்டும். அது போன்ற நிலை எப்போதாவது ஒரு முறை தான் அபராத சக்ரவர்த்தியான இந்தப் பித்தனுக்கு ஏற்படும்.
மொன்னு க3னி பொ4வரேஸ் மீ முகு3ந்தா – மொகொ3
மோக்ஷி தெ2வன் மொன்னு தோவி கோவிந்தா3
பொன்னா ஜா2ட் ஹிங்கி3 க2ளே மாத3வா - மொர
பொ3ன்னொ பு2ட்டி ஜேட3ரேஸ்ரே கேஸவா
மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா - எனக்கு
மோட்சம் தர மனம் வைப்பாய் கோவிந்தா
புன்னை மரம் ஏறி ஆடிய மாதவா - எனது
பானை உடைந்து போகின்றதே கேசவா
பாய்ம்பொடே3த் தூ ஹாத் சொட்னா அச்யுதா3 - தொர
பாயிர் பொடேஸ் ஹாத் தே3 ஸ்ரீ அனந்தா
மாய் பா3பு3ன் மொகொ3 தூஸ் ரே மாத3வா – ரெங்க3
ஸாயி மொகொ3 ஸாரே ஸ்ரீ கேஸவா
வணங்கினால் நீ கைவிடாய் அச்சுதா - உந்தன்
தாள் அடைந்தேன் கை கொடு ஸ்ரீ அனந்தா
தாய் தந்தை எனக்கு நீயே மாதவா - ரெங்க
சாயி என்னைப் பார்ப்பாய் ஸ்ரீ கேசவா
ராத் தீ3ஸுந் நாவ் மெனரெஸ் ராக3வா – தொகொ3
ராக் காய்ரே ராக் ஸோட்ரே ராக3வா
ஸாத் லோகு3ம் பொ4ரி ரியெஸி வாமனா - மொர
ஸாத் ரனோ மெல்லரேஸி உத்தமா
இராப்பகலாய் பெயர் சொல்கிறேன் இராகவா - உனக்கு
சினம் என்ன சினம் விடுவாய் இராகவா
ஏழுலகும் நிறைந்திருந்தாய் வாமனா - என்
உடனிருக்க வேண்டும் சொன்னேன் உத்தமா
No comments:
Post a Comment